டெல்லி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது கால் வலி சிகிச்சைக்காக லண்டன் செல்ல உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 முறை கோப்பையை வென்ற தோனி, 17வது சீசனில் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அவருக்குப் பதில், ருத்துராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். தோனி தனது 41 வயதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தற்போது நடைபெற்று வரும் ஐபிஎஸ் போட்டி தோனியின் கடைசி தொடராக கருதப்பட்டது. இந்த தொடர் முழுவதும் கடைசி நேரத்தில் தோனி களம் இறங்கினார். கடைசி லீக் போட்டியில் அவர் அதிரடியான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு இடம் பெறத் தவறியதைத் தொடர்ந்து ராஞ்சி சென்ற தோனி, அங்கு பைக்கில் ரைடு சென்ற காட்சி இணையத்தில் பரவி வைரலாகியது. இந்நிலையில், காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக தோனி விரைவில் லண்டன் செல்ல இருப்பதாகவும், லண்டனில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் பரவி தோனி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
விரைவில் லண்டன் செல்ல தோனி தயாராகி வருகிறாராம். தற்போது தோனி முழு உடல் தகுதியுடன் இல்லை. அறுவை சிகிச்சை முடிந்து குறைந்தது 6 மாதங்களுக்கு பின்னர் தான் தோனியின் உடல் நிலை சரியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}