சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி 159 ரன்களுக்கு அந்த அணியை நிறுத்தியது. சென்னை அணி வெல்ல 160 ரன்கள் தேவைப்படுகிறது.
சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். மும்பை அணிக்கு எதிரான சென்னை அணியின் பந்து வீச்சு இன்று சிறப்பாக இருந்தது. இடையில் லேசான தொய்வு ஏற்பட்டபோதிலும், சென்னை பவுலர்கள் சுதாரித்து மீண்டு வந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில், நமன் தீர் அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். அதேபோல ரியான் ரிக்கெல்டன் 24 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.

சூர்யகுமார் யாதவ் 12 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 18 ரன்களில் வெளியேறினார். மற்றவர்கள் பெரிய அளவில் ஆடவில்லை.
சென்னை அணியின் சார்பில் சிறப்பாக பந்துவீசிய அன்ஷுல் கம்போஜ் 4 ஓவர்களில் 32 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சென்னை அணியில் பிரசாந்த் வீர் மற்றும் ராமகிருஷ்ணா கோஷ் ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். மும்பை அணியில் கிரிஷ் பகத் சேர்க்கப்பட்டுள்ளார், மேலும் ரகு சர்மா அறிமுக வீரராகக் களமிறங்கியுள்ளார்.
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட உள்ளது. பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளுக்கும் இந்த வெற்றி மிகவும் அவசியமானதாகும்.
CSK Vs MI: மும்பை இந்தியன்ஸை 159 ரன்களுக்கு தடுத்து நிறுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
{{comments.comment}}