"கேரளாவில் படகு விபத்து நிகழும்.. 10 பேருக்கு மேல் இறப்பார்கள்".. முன்பே கணித்த நிபுணர்!

May 09, 2023,05:03 PM IST
மலப்புரம்: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நடந்த அதிர வைத்த படகு விபத்து குறித்து 2 மாதங்களுக்கு முன்பே சர்வதேச இயற்கைப் பேரிடர் நிர்வாக நிபுணர் முரளி தும்மருக்குடி கணித்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், தனூர் என்ற ஊரில் தூவர் தீரம் ஆற்றில் படகு கவிழ்ந்து 22 பேர் பரிதாபமாக பலியானார்கள். இதுதொடர்பாக படகின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த படகு விபத்து  2 மாதங்களுக்கு முன்பே முரளி தும்மருக்குடி  கணித்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக ஏப்ரல் 1ம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார் முரளி. பலரும் அதை ஏப்ரல் ஃபூல் போஸ்ட் என்றே நினைத்திருந்தனர். ஆனால் அந்தக் கணிப்பு தற்போது நிஜமாகியுள்ளது. அந்த பதிவில், விரைவில் கேரளாவில் ஒரு படகு விபத்து நிகழும். அதில் 10க்கும் மேற்பட்டோர் பலியாவார்கள். இதை நான் ஜோதிடரீதியாக சொல்லவில்லை. நடக்கும், ஏற்கனவே நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் சொல்கிறேன். கண்டிப்பாக இது நடக்கும். 



எத்தனையோ படகு விபத்துகள் நடந்து விட்டன. எத்தனையோ பேர் இறந்து விட்டனர். ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நாம் அக்கறை காட்டுவதில்லை. கவனிப்பதில்லை, கண்காணிப்பதில்லை. எல்லாம் நடந்து முடிந்த பின்னர்தான் அதைப் பற்றி பேசுகிறோம். குறிப்பாக டிவி விவாதங்கள் அனல் பறக்கும்.

கேரளவில் ஹவுஸ் போட் என்பது ஒரு சுற்றுலாவாகும். கோழிக்கோடு முதல் கொல்லம் வரை ஏராளமான ஹவுஸ் போட்டுகள் உள்ளன. எத்தனை போட்டுகள் உள்ளன என்று யாருக்காவது தெரியுமா.. தெரியாது.  உபேர், ஓலா போன்று புக்கிங் ஏன் ஹவுஸ் போட்டுகளுக்கு இல்லை. அதில் பயணிப்போர், தங்குவோருக்கு எண்ணிக்கை கட்டுப்பாடு ஏன் இல்லை.

முன்பெல்லாம் சென்னைக்குப் போனோம் என்றால் ரயில் நிலையத்திலேயே லாட்ஜுகளின் பிரதிநிதி நின்று தங்களது லாட்ஜுக்கு வருமாறு கூவிக் கூவி அழைப்பார்கள்.  ஆனால் இன்று அப்படி இல்லை. ஆப்புகள் வந்து விட்டன. யாரும் நம்மைத் தேடி வருவதில்லை. ஆனால் ஆலப்புழாவில் என்ன நிலைமை.. படகுகளுக்கு ஆள் பிடிக்க அலை மோதும் ஏஜென்டுகளைப் பார்க்கலாம். ஏன் போட்டுகளுக்கும் புக் செய்ய ஆப் இல்லை.?

படகுகள் அழகானவைதான். அருமையான அனுபவம்தான். ஆனால் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக உள்ளது. அதைப் பற்றி யாருமே கவலைப்படுவதில்லை. பயணிகளும் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. விமானத்தில், போனால் கப்பலில் போனால் மட்டும் நாம் பாதுகாப்பு குறித்து அக்கறை காட்டுகிறோம். ஆனால் ஹவுஸ் போட்டுக்கு அது இல்லை.

எதை எதையோ விவாதிக்கும் மீடியாக்களும் இதைக் கண்டு கொள்வதில்லை. ஒரு அசம்பாவிதம் நடந்த பிறகுதான் குய்யோ முறையோ என்று கூவுகிறார்கள். இப்போதும் அசம்பாவிதம் நடக்கும்.. மீடியா என்ன செய்யப் போகிறதோ.. ஆனால் என்னை தயவு செய்து டிபேட்டுகளுக்கு அழைத்து விடாதீர்கள் என்று கூறியுள்ளார் முரளி.

முரளி சொல்வது உண்மைதான்.. ஆலப்புழாவுக்குள் நுழைந்து விட்டாலே ஹவுஸ் போட்டுகளின் ஏஜென்டுகள் தொல்லை தாங்க முடியாது. அவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்கிள் போட் ஓனர்களின் பிரதிநிதிகளாகவே இருப்பார்கள்.  படகின் பாதுகாப்பு குறித்து யாருக்குமே தெரியாது. பணமே அவர்களின் குறியாக இருக்கிறது. இப்படிப்பட்ட அவல நிலையைத்தான் முரளி தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் சொன்ன அசம்பாவிதம் நடந்து விட்டது என்பது சோகமானது.

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?

news

பத்தாம் வகுப்பு மாணவர்களே.. இம்புட்டு விஷயம் உங்களுக்கு இருக்கு.. ரிலாக்ஸா இருங்க!

news

துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் காயம்

news

சிறு துறும்பாக இருந்தாலும்.. துச்சமாக எண்ணாதீர்கள்!

news

பயணங்கள் முடிவதில்லை.. Respect your journey

news

மீண்டும் வாழ ஒரு வாய்ப்பு கிடைத்தால்.. If I had life to live over again

news

தமிழகம் முழுவதும் தொடங்கிய SSLC பொதுத்தேர்வு: 9 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

news

தூக்கத்தில் வருவது கனவல்ல, உங்களைத் தூங்கவிடாமல் செய்வதே கனவு.. சொன்னது யாரு?

news

பெண்ணாக இருப்பதே பெருமை.. The Pride of Being a Woman (Short Story)

அதிகம் பார்க்கும் செய்திகள்