சென்னை: பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12 வது மாதமான துல்ஹஜ் 10 நாள் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை இஸ்லாமியர்கள் ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கின்றனர். இந்த ஹஜ் பெருநாளில் இஸ்லாமியர்கள் தொழுகைக்குப் பின்னர் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலி கொடுப்பது வழக்கம். இதன் பின்னர் இந்த இறைச்சிகளை மூன்று பங்காக பிரித்து இல்லாத ஏழை எளியவர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தானமாக வழங்குவர்.
இறைவன் கட்டளைக்காக, மகனை பலியிடத் துணிந்த இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக
பக்ரீத் பண்டிகை துல்ஹஜ் பத்தாவது நாளான இன்று இஸ்லாமியர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். இதனை தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவிக் கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரபு நாடுகளில் ஜூன் 15 முதல் 18 வரை அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.
முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
Dude.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் கேமியோ ரோல்.. யார் பண்றாங்கன்னு தெரியுமா?
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
{{comments.comment}}