பக்ரீத்.. உலகம் முழுவதும் சிறப்பு தொழுகைகளுடன்.. இஸ்லாமியர்கள் கொண்டாட்டம்

Jun 17, 2024,10:51 AM IST

சென்னை: பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.


தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12 வது மாதமான துல்ஹஜ் 10 நாள் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை இஸ்லாமியர்கள் ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கின்றனர். இந்த ஹஜ் பெருநாளில் இஸ்லாமியர்கள் தொழுகைக்குப் பின்னர் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலி கொடுப்பது வழக்கம். இதன் பின்னர் இந்த இறைச்சிகளை மூன்று பங்காக பிரித்து இல்லாத ஏழை எளியவர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தானமாக வழங்குவர்.




இறைவன் கட்டளைக்காக, மகனை பலியிடத் துணிந்த இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக

பக்ரீத் பண்டிகை துல்ஹஜ் பத்தாவது நாளான இன்று இஸ்லாமியர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். இதனை தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவிக் கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரபு நாடுகளில் ஜூன் 15 முதல் 18 வரை அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

பங்குனி மாத சிவராத்திரி வெகு விசேஷமானது.. எப்படி தெரியுமா?

news

நவராத்திரி.. எத்தனை வகை இருக்கு பாருங்க.. அதுல இன்னிக்கு என்ன விசேஷம் தெரியுமா?

news

தெரியுமா...?

news

காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்

news

திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை

news

இலங்கையில் மீண்டும் எரிபொருள் நெருக்கடி: வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை

news

தமிழ்நாடு, புதுச்சேரி வேட்பாளர் நேர்காணலைத் தொடங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

கரூர் வழக்கு: டில்லி சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்

news

ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையிலான போர்.. திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை

அதிகம் பார்க்கும் செய்திகள்