சென்னை: பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12 வது மாதமான துல்ஹஜ் 10 நாள் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை இஸ்லாமியர்கள் ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கின்றனர். இந்த ஹஜ் பெருநாளில் இஸ்லாமியர்கள் தொழுகைக்குப் பின்னர் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலி கொடுப்பது வழக்கம். இதன் பின்னர் இந்த இறைச்சிகளை மூன்று பங்காக பிரித்து இல்லாத ஏழை எளியவர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தானமாக வழங்குவர்.
இறைவன் கட்டளைக்காக, மகனை பலியிடத் துணிந்த இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக
பக்ரீத் பண்டிகை துல்ஹஜ் பத்தாவது நாளான இன்று இஸ்லாமியர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். இதனை தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவிக் கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரபு நாடுகளில் ஜூன் 15 முதல் 18 வரை அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}