பெண்ணே உன்னால் முடியும்!

Mar 08, 2026,04:04 PM IST
- க.யாஸ்மின் சிராஜூதீன்

பெண்ணின்றி பாரில்லை 
பாசத்திற்கு  விலையில்லை
வீரத்திற்கு குறைவில்லை...

இயற்கை அன்னை ...
பூமித்தாய் ..

வான் மகள் ... 
வெண்ணிலவு...

அளப்பரிய பெருமை பெண்ணிற்கே 
வையம் தந்து வாழ்த்து கோடி சொல்லி  கிரீடம் சூட்டுதே....

சொல்லில் சொல்லி அடக்கிவிட முடியாது ...

அன்றும் இன்றும் என்றுமே 
தன்னிகரில்லா பெருமையின் சின்னமே ...



நாட்டின் கண்களே...
வீட்டின் ஒளிவிளக்குகளே....
தீப ஒளியாய் ஒளிவீசிடுங்கள் ...

வீட்டையும் நாட்டையும் காக்கும் கரங்களே....
எங்கள் பூமித்தாயின் 
செல்ல மலர்களே..

பெண்கள் நாட்டின் கண்கள் 
வீட்டின் ஒளி விளக்குகள்...

பெண்ணின்றி அமையாது உலகு
அவளின்றி மகிழாது வீடு....

பெண்கள் தடம் பதியாத துறைகள் இல்லை....
பெண்ணடிமை வீடுகள் சிறப்புறுவதும் இல்லை....

எத்தனை எத்தனை பதவிகள் பெண்ணிற்கு ....  
அம்மா, அக்கா, தங்கை,மகள்,
மனைவி, தோழி , பாட்டி ......
அடுக்கிக் கொண்டே செல்லலாம்....

மாணவர்களுக்கு ஆசிரியராகவும் 
அம்மாவாகவும்....
அன்பின் உருவமாகவும் திகழ்பவள்....

மாற்றம்  ஒன்றே மாறாதது மனபலம் ஒன்றே  சாதிப்பது...
பெண் காணாத போராட்டம் இல்லை 
வெற்றி பெறாமல் விட்டதுமில்லை...

சொல்லில் அடக்கிவிடமுடியாது 
பெண்களின் பெருமையையும்,தியாகத்தையும்...

பெண்னை யார் என்று நினைத்தீர்  ..... 

வளைபோட்ட கைகள் சமையல் மட்டும்... 
செய்யும் என்று  நினைத்தீரோ 

பார்போற்ற..... 
எட்டுத்திக்கும்  புகழ்பரவ
வான்வெளியில் ஆராய்ச்சி.. 

அனைத்து துறைகளிலும் பெண்களின்  கைவண்ணம்.... 

மெல்லிய மலர் போல் மென்மையவள் ... 

என்ற வர்ணனைக்கு 
அடங்கிவிடுவாளா அவள்... 

மென்மைக்குள் மேரு போன்ற
உயர்பண்புடையவள்.... 

வீட்டிற்கும் நாட்டிற்கும் அவளே உயிர்நாடி.... 

பாசமும் நேசமும் பணிவும்
பேரன்பும் ... 

பொறுமையும்  துணிவும்  கொண்ட வீரமங்கையவள் .... 

பெண்ணே உன்னால் முடியும்
சாதனைப்படைத்திடு ... 

(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

news

அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்