- ந. தீபலட்சுமி
காலையில் சமையலறையில்...
காற்றினில் மிதந்து வந்த
கானத்தைக்
கேட்டுக் கொண்டே..
காய்கறி நறுக்கிய
காதுகளில் ஒலித்தது...
'போறாளே பொன்னுத் தாயி' என்ற
கருத்தம்மா பாடல்.

கள்ளிப் பாலின் மகிமை
தாயின் இயலாமை
பாலூற்றும் அவளும்
ஓர் பெண் தானே
என்ற எண்ணமின்மை.
என்று தணியும்...
இந்த அரக்கத்தனம்..
என்ற வேண்டுதலை
இறைவன் கேட்டிருப்பானோ ?
மெது மெதுவே
மலர்ந்தது காலம்..
சுதந்திர நாட்டில்
பெண் சுதந்திரம் மட்டும்
எப்போது...?
என ஏங்க வைத்த
எண்ணத்தை மாற்றியது.
கல்வியறிவு வளர்ந்தது...
கடமைகள் அழைத்தது...
மடமைகள் மறைந்தது...
வெற்றிகள் மிளிர்ந்தது!
நீர்,நிலம், காற்று..
ஆகாயம் அவள்
விழி அசைவில்...
ஆட்சி செய்ய
ஆரம்பித்தாள்....ஆர்ப்பரித்தாள் !
இன்னும் வளர்வாள்...
சமூக புல்லுருவிகளைக்
கருவருக்க...இரும்புக் கரம்
கொண்டு ஒடுக்க
உருவெடுப்பாள்..
அவளே பெண்..
அவளே மகள்...
அவளே மனைவி..
அவளே தோழி..
அவளே அன்னை !
துணிவு வாய்ந்த
துடிப்பான
துள்ளலான
அனைவருக்கும்
இனிய
தேசிய பெண் குழந்தைகள் தின வாழ்த்துகள்!
(ந.தீபலட்சுமி, பட்டதாரி ஆசிரியர் - ஆங்கிலம், அரசினர் மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டம்)
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}