ஹாயாக.. இலங்கை புறப்பட்ட பயணிகள் கப்பல்.. இனி நாகை டூ இலங்கை பயணம் ஈஸி

Oct 14, 2023,03:48 PM IST

நாகப்பட்டினம்: தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று தொடங்கியது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து இன்று தொடங்கியது .பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார்.


பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்க விழா நாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது .இதில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வேலு ஆகியோர் பங்கேற்று கொடியசைத்து கப்பல் சேவையை தொடங்கி வைத்தனர். பின்னர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக உரையாற்றினார் . அதில் ஆங்கிலம், சிங்களம், தமிழ் என மூன்று மொழிகளில் தனது வணக்கங்களை கூறி பேசினார்.




இந்தக் கப்பல் நாகையில் இருந்து புறப்பட்டு இலங்கை  காங்கேசன் துறைமுகத்திற்கு சென்றடைய 60 மைக்கல் தொலைவு உள்ளது .இந்த கப்பல் சென்றடைய  3.30 மணி நேரம்  ஆகும். இந்த கப்பல் போக்குவரத்து தினமும் இலங்கையிலிருந்து நாகைக்கும், நாகையிலிருந்து இலங்கைக்கும்  தலா ஒரு முறை இயக்கப்படும்.  பயணிகள் கப்பல் போக்குவரத்து தினமும் காலை 7 மணிக்கு நாகையில் இருந்து புறப்பட்டு மதியம் 12 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு  சென்றடையும். பின்னர் அங்கிருந்து மதியம் 1:30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணி அளவில் நாகையை வந்தடையும்.


இலங்கையிலிருந்து நாகைக்கும், நாகையிலிருந்து இலங்கைக்கும் பயணிகள் கப்பல் போக்குவரத்து கட்டணம் ஜிஎஸ்டி உட்பட ரூபாய் 7,670ஆக நிர்ணயித்துள்ளனர். கப்பலில் பயணம் செய்பவர்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் வரிச்சலுகையாக ரூபாய் 3000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 150 பயணிகள் செல்லுமாறு இந்த பயணிகள் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 50 பேர்  இன்று இலங்கைக்கு பயணம் செய்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்