எம்ஜிஆர் பாடல் வரிகளில் உருவான.. "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே".. நாளை ரிலீஸ்..!

Mar 07, 2024,04:05 PM IST

சென்னை: இளம்  வயதினரிடையே நட்பு மற்றும் அவர்களது கனவு குறித்து பாசிட்டிவாக  எடுத்துச் சொல்லும் "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே" திரைப்படம் நாளை (மார்ச் 8)  75 திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.


நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே என்ற எம்ஜிஆர் பாடல் வரிகளில் இப்படத்தின் தலைப்பு அமைந்துள்ளது. மேலும் இப்படத்தின் தலைப்பிற்கேற்ப, இப்படம் இளம் வயதினரிடையே நட்பு மற்றும் அவர்களது கனவு குறித்தும் பாசிட்டிவாக பேசும் படமாக இருக்குமாம்.


எஸ் ஹரி உத்ராவின் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே திரைப்படம் உருவாகியுள்ளது.  இயக்குனர் பிரசாத் ராமர் இப்படத்தை எழுதி இயக்கி உள்ளார் .இதில் கதை மற்றும் திரைக்கதையை திறமையாக வடிவமைத்துள்ளார்.  இவர் ஏற்கனவே சித்தார்த் நாயகனாக நடித்த எனக்குள் ஒருவன் திரைப்படத்தை இயக்கி பிரபலமானவர். இப்படத்திற்கு இசை மற்றும் பாடல்களை உருவாக்கிய பிரதீப் குமார் இப்படத்தை தயாரித்தும் உள்ளார்.




இப்படத்தின் மூலம் செந்தூரப் பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ப்ரீத்தி கரண் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்ச்செல்வி, ஷவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், நாகராஜ், எஸ்.கே தாஸ், எம்.அமுதராணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.


இந்நிலையில் இப்படம் நாளை மார்ச் 8 ஆம் தேதி வெள்ளியன்று, 75 திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் இப்படத்தைப் பற்றி தயாரிப்பாளர் எஸ். பிரதீப் குமார் கூறுகையில், எஸ். ஹரி உத்ரா அவர்கள் இந்தப் படத்தின் மீது மிகுந்த ஆர்வம் காட்டி, இந்தப் படத்தை வெளியிட முன்வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.




இந்தத் திரைப்படத்தை உருவாக்குவதற்குப் பின்னால் உள்ள எங்களின் நோக்கம், அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கக் கூடிய ஒரு கண்ணியமான அதேசமயம் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படத்தைக் கொடுக்க வேண்டும் என்பதுதான். 


இந்தப் படத்தை உருவாக்குவதற்குப் பெரிய தூணாக இருந்த இயக்குநர் பிரசாத் ராமர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், குறிப்பாக எஸ். ஹரி உத்ராவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

வரலாற்று சாதனை பெற்று வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 2000த்தை நெருங்கியது

news

முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி

news

தென்னகத்து காசி.. காலபைரவர் கோவில்.. ஈரோடு போனா மறக்காம போய்ட்டு வாங்க!

news

சமுதாயமும் ஆன்மீகமும் (The Society and Spirituality)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

news

மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்