வீட்டின் வாசலில் நின்றாலும்.. வானம் வரை நீளும் கனவுகள்!

Jan 24, 2026,03:07 PM IST

- தி.மீரா


பெண் குழந்தை ஒரு பிறவி அல்ல,

புது உலகின் முதல் விடியல்.

அவள் சிரிப்பில் தொடங்குகிறது

நாளைய நம்பிக்கை.


மண்ணில் விழும் விதையாய்,

மகத்தான மரமாய் வளர்கிறாள்.

கனவுகளை கண்களில் சுமந்து

காலத்தை மாற்றுகிறாள்.




கல்வி அவளின் இறக்கைகள்,

தைரியம் அவளின் வாள்.

அன்பால் உலகை வெல்லும்

அமைதியான புரட்சி அவள்.


அவளை காக்கும் சமூகம்

தன்னையே காக்கும்.

பெண் குழந்தை மதிக்கப்படும் நாள்

தேசம் உயர்ந்து நிற்கும் நாள்.


அவள் கேள்விகள் விதை போடுகின்றன,

பதில்கள் புரட்சியாக மலர்கின்றன.

வீட்டின் வாசலில் நின்றாலும்

வானம் வரை கனவு காண்கிறாள்.


சம வாய்ப்பு கிடைத்தால்

சாதனைகள் அவளின் பெயர்.

பெண் குழந்தை சிரிக்கும் உலகமே

உண்மையான முன்னேற்றத்தின் அடையாளம்.


(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விடைபெற்றார் பாரதிராஜா.. முதல் மரியாதை நாயகனுக்கு ஆயிரக்கணக்கானோர் இறுதி மரியாதை!

news

அல்லி நகரின் அகல் விளக்கே.. வெள்ளித் திரையின்.. மங்காத ஒளியே!

news

கரூரில் கூட்ட நெரிசல் வழக்கு:மீண்டும் விறுவிறுப்பான சி பி ஐ விசாரணை

news

தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுகிறாரா? டெல்லியில் தீவிர ஆலோசனை

news

எம்ஜிஆர்., வழியில்...நாளை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் முதல்வர் விஜய்

news

என்னது...முதல்வர் தொகுதியிலேயே குடிநீர் விநியோகம் ரத்தா?

news

நமது துன்பத்திற்கு நாமே காரணமா?

news

திமுக கூட்டணியில் சி.பி.ஐ. நீடிக்கும் சூழல் இப்போது இல்லை.. மு.வீரபாண்டியன் அறிவிப்பு

news

ஹார்மோஸ் நீரிணை முற்றிலும் மூடல்: ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்