- தி.மீரா
பெண் குழந்தை ஒரு பிறவி அல்ல,
புது உலகின் முதல் விடியல்.
அவள் சிரிப்பில் தொடங்குகிறது
நாளைய நம்பிக்கை.
மண்ணில் விழும் விதையாய்,
மகத்தான மரமாய் வளர்கிறாள்.
கனவுகளை கண்களில் சுமந்து
காலத்தை மாற்றுகிறாள்.

கல்வி அவளின் இறக்கைகள்,
தைரியம் அவளின் வாள்.
அன்பால் உலகை வெல்லும்
அமைதியான புரட்சி அவள்.
அவளை காக்கும் சமூகம்
தன்னையே காக்கும்.
பெண் குழந்தை மதிக்கப்படும் நாள்
தேசம் உயர்ந்து நிற்கும் நாள்.
அவள் கேள்விகள் விதை போடுகின்றன,
பதில்கள் புரட்சியாக மலர்கின்றன.
வீட்டின் வாசலில் நின்றாலும்
வானம் வரை கனவு காண்கிறாள்.
பெண் குழந்தை சிரிக்கும் உலகமே
உண்மையான முன்னேற்றத்தின் அடையாளம்.
(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}