கைகள் மெலிந்தாலும், கனவுகள் வலிமை கொண்டவை.. பெண் குழந்தைகள்!

Jan 24, 2026,03:02 PM IST

- ச.சுமதி


சிறுமி சிரிப்பில் சூரிய ஒளி,

சிந்தனை கண்களில் கனவு ஒளி.


கைகள் மெலிந்தாலும்,

கனவுகள் வலிமை கொண்டவை.


அவள் பிறப்பு சுமையல்ல,

அவள் எதிர்காலம் செல்வம்.


புத்தகமே அவள் பொம்மை,

பயிற்சியே அவள் சிறகு.


கேள்விகள் கேட்கும் துணிவு,

காலத்தை மாற்றும் திறன்.




பாதுகாப்பு அவள் உரிமை,

படிப்பு அவள் அடையாளம்.


பெண் குழந்தை வளர்ந்தால்,

தேசமே உயர்ந்து நிற்கும்.


இன்று கொண்டாடுவோம்,

நாளை காப்போம்—

பெண் குழந்தையை,

பிரகாசமான இந்தியாவை.


(ச. சுமதி, M.A., B.Ed., பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்), ஶ்ரீ KGS மேல்நிலைப் பள்ளி, ஆடுதுறை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

கொளத்தூர் எம்எல்ஏ., வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி: சுவாசக் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : ராஜினாமா செய்தவர்களை வேட்பாளராக்கிய தவெக

news

விஜய்யை DUMMY CM ஆக நினைக்கிறார்களா காவல்துறையினர்.. உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்