தேசிய அஞ்சல் தினம்.. லெட்டர், பார்சல் எல்லாம் எப்படி போகுது.. டெமோ காட்டிய அதிகாரிகள்!

Oct 09, 2024,03:43 PM IST

சிவகங்கை:   தேசிய  அஞ்சல் வாரத்தை முன்னிட்டு தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகப் பள்ளியில் தபால் பார்சல் சேவை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.


தபால் அமைப்புகள் பல நூற்றாண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கடந்த காலகட்டத்தில் ஒருவருக்கு, ஒரு செய்தியை அனுப்ப வேண்டும் என்றால் தபால் சேவை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதன் மூலம் எழுத்து திறன் எழுதும் பயிற்சி  பொலிவடைந்தது. ஆனால் தற்போது தொழில்நுட்ப சாதனங்கள் அதிகரித்து வந்ததால்  தபால் சேவையின் பயன் குறைந்துள்ளது. ஆனால் அஞ்சலகத்தின் மூலம் அனுப்பப்படும் பார்சல் சேவைகள் தற்போது வரை செயல்பட்டு வருகின்றன.




இந்த நிலையில் அஞ்சல் சேவையின் முக்கியத்துவத்தை எடுத்து கூறும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு தேசிய அஞ்சல் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வரிசையில் இன்று தொடங்கும் தேசிய அஞ்சல் தினம் அக்டோபர் 15ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது.


அந்த வரிசையில் தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு சேர்மன் மாணிக்கவாசகப் பள்ளி மாணவ மாணவிகள் தலைமை ஆசிரியர்  சொக்கலிங்கம் தலைமையில் அஞ்சலகத்திற்கு களப்பயணம் சென்றனர். இவர்களுடன் ஆசிரியர்கள் முத்து லெட்சுமி மற்றும் ஸ்ரீதர் உடன் இருந்தனர்.




அப்போது தேவகோட்டை அஞ்சல் துறை தலைமை தபால் அதிகாரி செல்வராஜ் மாணவர்களை வரவேற்று தபால் சேவைகளின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துக் கூறி பேசினார். 


மேலும் இது குறித்து அவர் கூறியதாவது,


அஞ்சல் மற்றும் பார்சல் என்பது  வாடிக்கையாளர்களுக்கு நல்ல உதவியாக இருக்கும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பார்சல் சேவை மிக குறைந்த செலவில் அனுப்பலாம். அனைத்து தபால் பெட்டிகள் மின்னணு செயலாக்கத்திற்கு மாற்றப்பட்டு உள்ளதையும் விளக்கினார்.




வெளிநாட்டு பார்சல் அனுப்புவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அந்தமானுக்கு அனுப்பவேண்டிய பார்சல் தொடர்பாக முழு விவரங்கள் வழங்கப்பட்டது. அஞ்சல் துறையின் வழியாக அனுப்பும் தபால்களுக்கு  மட்டுமே பொறுப்பு உண்டு.  மிகவும் குறைவான கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்புவது அஞ்சலகத்தில் மூலம் மட்டுமே இயலும் .அஞ்சலகத்தில் மூலமாக அனுப்பப்படும் பார்சல்கள் மிகக் குறைவான நாட்களில் வெளிநாடுகளை சென்று அடையும் என பேசினார்.


இதனை தொடர்ந்து மாணவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு, பதில் கூறிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை

news

தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை

news

இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?

news

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்

news

Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!

news

கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?

news

சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!

news

Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!

news

இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is

அதிகம் பார்க்கும் செய்திகள்