நவி மும்பை தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா.. கு.ஞானசம்பந்தன் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம்

Feb 14, 2026,04:09 PM IST
நவி மும்பை: நவி மும்பை தமிழ்ச் சங்கம் தனது 50-ஆவது ஆண்டு பொன்விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு மாபெரும் நகைச்சுவைப் பட்டிமன்றம் ஒன்றை இன்று (பிப்ரவரி 14) முன்னெடுத்துள்ளது. சிறப்பு நகைச்சுவைப் பட்டிமன்றத்தை பெரும் திரளான தமிழர்கள் திரண்டு வந்து ரசித்து மகிழ்ந்தனர்.

வாசி பஸ் டெப்போ எதிரே அமைந்துள்ள புகழ்பெற்ற விஷ்ணுதாஸ் பாவே அரங்கில் இன்று காலை 10 மணி அளவில் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. 1976-இல் தொடங்கப்பட்ட நவி மும்பை தமிழ்ச் சங்கம், தனது நீண்டகாலத் தமிழ்ப் பணியைக் கொண்டாடும் விதமாக இந்தச் சிறப்பு நிகழ்வை ஒருங்கிணைத்துள்ளது.





பிரபலத் தொலைக்காட்சிப் புகழ் மற்றும் நகைச்சுவை மேதை கலைமாமணி முனைவர் ஜி. ஞானசம்பந்தன் இந்தப் பட்டிமன்றத்திற்கு நடுவராகப் பொறுப்பேற்றுத் தலைமை தாங்கினார். பல்வேறு முன்னணித் தொலைக்காட்சி சேனல்களில் புகழ்பெற்ற பேச்சாளர்கள் இதில் கலந்துகொண்டு நகைச்சுவை மழையில் மக்களை நனைத்தனர்.

நவி மும்பை தமிழ்ச் சங்கம் பல தசாப்தங்களாக மும்பை வாழ் தமிழர்களின் கலாச்சார மையமாகத் திகழ்ந்து வருகிறது. வாசி செக்டர் 9A-வில் உள்ள திருவள்ளுவர் மார்க்கில் அமைந்துள்ள தனது சொந்தக் கட்டிடத்தின் மூலம் கல்வி, கலை மற்றும் சமூகப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றி வருகிறது.

பொன்விழா கொண்டாட்டத்தில் நவி மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான தமிழர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டுள்ளனர்.

இன்று நடந்த பட்டிமன்றமானது,  குடும்பத்தின் வெற்றிக்கு பெரிதும் காரணம் — நிறைவான வருமானமா? முறையான நிர்வாகமா என்ற தலைப்பில் நடைபெற்றது. 

முறையான நிர்வாகம் என்ற தலைப்பில் பேசியவர்கள், வருமானம் குறைவாக இருந்தாலும் சரியான திட்டமிடல், சேமிப்பு, செலவுக் கட்டுப்பாடு இருந்தால் குடும்பம் நிலையாக இருக்கும். எதிர்காலத் தேவைகளுக்கான பாதுகாப்பு ஏற்படும். பல குடும்பங்கள் நடுத்தர வருமானத்திலேயே நல்ல நிர்வாகத்தால் முன்னேறியுள்ளன என்ற வாதத்தை நகைச்சுவையுடன் முன்வைத்து வாதாடி அசத்தினர்.



நிறைவான வருமானம் என்ற தலைப்பில் பேசியவர்கள், அடிப்படை தேவைகள் (வீடு, கல்வி, சுகாதாரம்) பூர்த்தி ஆக வேண்டும். வருமானம் இல்லையெனில் நிர்வாகம் மட்டும் போதாது என்ற  புள்ளிவிவரங்களை எடுத்து வைத்து கலக்கினர்.

முறையான நிர்வாகம் தான் நீண்ட கால குடும்ப வெற்றிக்கு முக்கிய காரணம். நிறைவான வருமானம் ஒரு ஆதாரம்; ஆனால் சரியான நிர்வாகம் இல்லையெனில் அதிக வருமானமும் வீணாகலாம். வருமானம் முக்கியம் – ஆனால் நிர்வாகம் மிக முக்கியம் என்ற தீர்ப்பை நடுவர் கு. ஞானசம்பந்தன் வழங்கினார்.

செய்தி + புகைப்படம்:  ராஜ் முஹம்மது
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கூட்டணி ஆட்சி பற்றி இனி யாரும் கேட்க மாட்டார்கள்...என்ன ஆர்.எஸ்.பாரதி இப்படி சொல்லிட்டார்?

news

தமிழில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்கிறேன்: மத்திய அமைச்சர் அமித்ஷா

news

அவர் எல்லாம் ஒரு ஆளா? அதெல்லாம் ஒரு கட்சியா?: நயினார் நாகேந்திரனுக்கு செங்கோட்டையன் பதிலடி!

news

40 சீட் கொடுத்தே தீரனும்...மீண்டும் புயலை கிளப்பிய மாணிக்கம் தாகூர்

news

சாயந்திரம் ஆயிருச்சா.. வாங்க வாழைக்காய் கனவறுவல் செஞ்சு சாப்பிடலாம்!

news

மதுரை மீனாட்சி நகரின் காதல்!

news

அன்பு!

news

தமிழகத்தை மீட்போம்: பிப். 21 முதல் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம்! – அதிமுக அறிவிப்பு

news

உணர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்