புழல் ஜெயிலில் குஷ்பு.. திடீர் ஆய்வுக்குப் பின் "சர்பிரைஸ் சபாஷ்"!

Jul 20, 2023,03:28 PM IST

சென்னை: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ள நடிகையும், பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு சென்னை புழல் மகளிர் சிறைக்குச் சென்று ஆய்வு நடத்தினார். அந்த ஆய்வுக்குப் பின்னர் சிறை மிகவும் சுத்தமாகவும், சரியாகவும் இருப்பதைக் கண்டு அதிகாரிகளைப் பாராட்டி தனது ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தினார்.


நடிகை குஷ்பு தற்போது தேசிய மகளிர்  ஆணைய உறுப்பினராக உள்ளார். அந்த அடிப்படையில் நேற்று சென்னை புழல் மகளிர் சிறைக்கு அவர் சென்று ஆய்வு நடத்தினார். இதுகுறித்து அவர் டிவீட் போட்டுள்ளார்.




அந்த டிவீட்டில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக புழல் சிறைக்கு நேற்று சென்றிருந்தேன். ஜெயிலருடன் நீண்ட நேரம் உரையாடினேன்.  சிறைக் கைதிகளுக்கு என்ன மாதிரியான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன, அவர்களுக்கு இன்னும் செய்யலாம், அவர்களது வாழ்க்கைத் தரத்தை எப்படி மேம்படுத்தலாம் என்பது கு��ித்து உரையாடினோம்.


சிறை வளாகம் மிகவும் சுத்தமாக இருந்தது, சரியாக இருந்தது என்னை ஆச்சரியப்படுத்தியது. கைதிகளை அங்கு நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள்.  அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. சிறையிலிருந்து விடுதலை ஆன பிறகு அவர்கள் சொந்தக் காலில் நிற்க இது உதவும். அவர்களுக்கான நிதி ஆதாரத்தை அவர்களே ஏற்படுத்திக் கொள்ளவும் உதவும்.


இதை மேலும் எப்படி சிறப்பாக அமல்படுத்தலாம், மேற்கொள்ளலாம் என்பது குறித்து எனது கருத்துக்களையும் ஜெயிலரிடம் தெரிவித்தேன் என்று கூறியுள்ளார் குஷ்பு.




மணிப்பூர் குரூரத்திற்கு குஷ்பு கண்டனம்


முன்னதாக மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தி குரூரமாக நடத்தப்பட்டது குறித்து குஷ்பு கடும் கண்டனத்தைத்  தெரிவித்திருந்தார். 


இதுதொடர்பாக அவர் போட்டிருந்த டிவீட்டில்,  எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும் சரி, இதுபோன்ற கொடுமைகளுக்கு மரண தண்டனையைத் தவிர வேறு எதுவுமே பொருத்தமாக இருக்காது. இதில் ஈடுபட்ட அத்தனை பேருக்கும் அந்தத் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இந்த கொடிய குற்றத்தில் ஈடுபட்ட அத்தனை ஆண்களும் மரண தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும். இதை வேடிக்கை பார்த்தவர்களும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். மதக் கலவரங்கள், குடும்ப சண்டைகள், தனிப்பட்ட மோதல்கள், பழிவாங்கல்கள், இப்படி எந்த பிரச்சினையாக இருந்தாலும் பெண்கள்தான் குறி வைக்கப்படுகிறார்கள். நமது சமுதாயத்தில் நமது ஆண்கள், எந்த அளவுக்கு கொடூரமாகவும், முதுகெலும்பில்லாதவர்களாகவும், கோழைகளாகவும் இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது என்று குமுறியிருந்தார் குஷ்பு.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்