சென்னை: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ள நடிகையும், பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு சென்னை புழல் மகளிர் சிறைக்குச் சென்று ஆய்வு நடத்தினார். அந்த ஆய்வுக்குப் பின்னர் சிறை மிகவும் சுத்தமாகவும், சரியாகவும் இருப்பதைக் கண்டு அதிகாரிகளைப் பாராட்டி தனது ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தினார்.
நடிகை குஷ்பு தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ளார். அந்த அடிப்படையில் நேற்று சென்னை புழல் மகளிர் சிறைக்கு அவர் சென்று ஆய்வு நடத்தினார். இதுகுறித்து அவர் டிவீட் போட்டுள்ளார்.
அந்த டிவீட்டில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக புழல் சிறைக்கு நேற்று சென்றிருந்தேன். ஜெயிலருடன் நீண்ட நேரம் உரையாடினேன். சிறைக் கைதிகளுக்கு என்ன மாதிரியான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன, அவர்களுக்கு இன்னும் செய்யலாம், அவர்களது வாழ்க்கைத் தரத்தை எப்படி மேம்படுத்தலாம் என்பது கு��ித்து உரையாடினோம்.
சிறை வளாகம் மிகவும் சுத்தமாக இருந்தது, சரியாக இருந்தது என்னை ஆச்சரியப்படுத்தியது. கைதிகளை அங்கு நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. சிறையிலிருந்து விடுதலை ஆன பிறகு அவர்கள் சொந்தக் காலில் நிற்க இது உதவும். அவர்களுக்கான நிதி ஆதாரத்தை அவர்களே ஏற்படுத்திக் கொள்ளவும் உதவும்.
இதை மேலும் எப்படி சிறப்பாக அமல்படுத்தலாம், மேற்கொள்ளலாம் என்பது குறித்து எனது கருத்துக்களையும் ஜெயிலரிடம் தெரிவித்தேன் என்று கூறியுள்ளார் குஷ்பு.
மணிப்பூர் குரூரத்திற்கு குஷ்பு கண்டனம்
முன்னதாக மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தி குரூரமாக நடத்தப்பட்டது குறித்து குஷ்பு கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அவர் போட்டிருந்த டிவீட்டில், எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும் சரி, இதுபோன்ற கொடுமைகளுக்கு மரண தண்டனையைத் தவிர வேறு எதுவுமே பொருத்தமாக இருக்காது. இதில் ஈடுபட்ட அத்தனை பேருக்கும் அந்தத் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இந்த கொடிய குற்றத்தில் ஈடுபட்ட அத்தனை ஆண்களும் மரண தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும். இதை வேடிக்கை பார்த்தவர்களும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். மதக் கலவரங்கள், குடும்ப சண்டைகள், தனிப்பட்ட மோதல்கள், பழிவாங்கல்கள், இப்படி எந்த பிரச்சினையாக இருந்தாலும் பெண்கள்தான் குறி வைக்கப்படுகிறார்கள். நமது சமுதாயத்தில் நமது ஆண்கள், எந்த அளவுக்கு கொடூரமாகவும், முதுகெலும்பில்லாதவர்களாகவும், கோழைகளாகவும் இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது என்று குமுறியிருந்தார் குஷ்பு.
துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் காயம்
தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?
ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்
தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு
பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்
நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!
திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?
தொடக்கம்!
{{comments.comment}}