வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!

Apr 01, 2025,06:57 PM IST
டெல்லி: தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஏப்ரல் மற்றும் ஜூன் மாத காலகட்டத்தில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது‌ குறிப்பாக  தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக காணப்படுகிறது. அத்துடன் வெப்ப அலையும் அதிகமாக வீசுகிறது‌.இதனால் மக்கள் மதிய வேலைகளில் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் ஏப்ரல் மற்றும் ஜூன் மாத காலகட்டத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம்.  கணித்துள்ளது. 

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:



நாட்டின் பல்வேறு பகுதிகளில் குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட கூடுதலாக இருக்கும். மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் சில பகுதிகளில் மட்டும் வழக்கமான பருவநிலை நீடிக்கும். ஏப்ரல் முதல் ஜூன் மாத காலகட்டத்தில் வழக்கமாக நான்கு முதல் ஏழு நாட்கள் வெப்ப அலை வீசும் நிலையில், இயல்பை விட வெப்ப அலை வீசும் நாட்கள் இரு மடங்காக அதிகரிக்கும்.

அதன்படி ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், ஒடிசா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும் நாட்கள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் எதிரொலியாக நாட்டில் மின்சார பயன்பாடு 9 முதல் 10 விழுக்காடு அதிகரிக்கும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா

news

RIP Bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு.. நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

news

தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம்.. நாளை கூடுகிறது

news

இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமர்.. நரேந்திர மோடி சாதனை.. உலகத் தலைவர்கள் வாழ்த்து!

news

இயக்குனர் இமயம் பாரதிராஜா.. அந்த முட்டத்து கடல் அலைகள் கடற்கரை மணல்கள் கண்ணீர் விடுகிறது!

news

பாஜகவிலிருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி...தலைமை மீது பகீர் குற்றச்சாட்டு

news

சிந்தனைச் சிதறல்.. நின்ற இடத்திலேயே வெல்வது எப்படி?

news

பரம ஏகாதசி.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஏகாதசி.. பாவங்கள் நீங்கும்

news

Kalaiyarasi Muthuvel Poem: அமிலம் கொட்டினாலும் ஆழ்துளையிட்டாலும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்