உலக தடகளப் போட்டிகளில் தங்கம்.. இந்தியாவின் நீரஜ் சோப்ரா சாதனை

Aug 28, 2023,08:53 AM IST
டெல்லி: புடாபெஸ்ட்டில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஈட்டி எறியும் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

உலக தடகளப் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் நீரஜ் சோப்ராதான் என்பது குறிப்பிடத்தக்கது. தனது 2வது முயற்சியில் தங்கம் வெல்லும் இலக்கைத் தொட்டார் நீரஜ் சோப்ரா. 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இந்த சாதனையை அவர் படைத்தார் 



2022ம் ஆண்டு நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியை விட இப்போது அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அந்தத் தொடரில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

2வது இடத்தை பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் பெற்றார். செக் நாட்டின் ஜாக்குப் வட்லேஜா வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் மேலும் 2 இந்தியர்களான கிஷோர் ஜெனா, டி.பி மனு ஆகியோரும் கூட இருந்தனர். இருப்பினும் அவர்களால் இறுதிச் சுற்றுக்கு வர முடியாமல் போய் விட்டது.  கடைசி 8 இடங்களில் அவர்கள் இடம் பிடித்தனர். அதாவது 5 மற்றும் 6வது இடத்தைப் பெற்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்