டில்லி : நீட் யுஜி தேர்வு கேள்விகளை லீக் செய்வதற்கு ரூ.32 லட்சம் வரை பெற்றதாக முக்கிய குற்றவாளி வாக்குமூலம் அளித்துள்ளது. அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சமீபத்தில் நீட் யுஜி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ஒடிசாவை சேர்ந்த, அதுவும் ஒரே ஊரை சேர்ந்த எட்டு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று, டாப் ரேங்க் பட்டியலில் இடம்பிடித்திருந்தனர். ஒரே ஊரை சேர்ந்தவர்கள் மட்டும் எப்படி இவ்வளவு மதிப்பெண் வாங்க முடியும் என சந்தேகம் எழுப்பப்பட்டு, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் நீட் தேர்வுக்கான கேள்வித்தாள்கள் ஏற்கனவே லீக் செய்யப்பட்டதும், அதை பயன்படுத்தியே ஒரே ஊரை சேர்ந்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றதும் தெரிய வந்தது. இது தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரைணயில், தானாபூர் முனிசிபல் கமிட்டி ஜூனியர் இன்ஜினியர் சிக்கந்தர் யாதவேந்து அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
நீட் கேள்வி கசிவு விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஆனந்த்தை தொடர்பு கொண்ட சிக்கந்தர், நீட் தேர்வுக்கு தயாராகி வரும் 4 மாணவர்கள் , கேள்விகளை லீக் செய்தால் லட்சங்களில் பணம் தர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதை ஏற்றுக் கொண்ட ஆனந்த்தும் கேள்வி தாள்களை கொடுத்துள்ளார். அதற்கு பதிலும் தயார் செய்து அந்த 4 மாணவர்கள் மற்றும் இன்னும் சிலருக்கு கொடுத்துள்ளனர். இதற்காக ரூ.32 லட்சம் வரை பணம் பெற்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஆனந்த், அவரது சகோதரி ரீனா யாதவ் ஆகியோரின் வீடுகளில் இருந்து நீட் கேள்வி தாள்கள், ஓஎம்ஆர் ஷீட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. நாட்டை அதிர்ச்சி அடைய வைத்துள்ள இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மனம்...!
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அன்று பல்லவர் பூமி.. இன்று பலரது பூமி.. சீர்மிகு செங்கல்பட்டு!
பெண் பிள்ளைகள் - இந்த மண் பிள்ளைகள்.. தேசிய பெண் குழந்தைகள் தினம்!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
தொடர்ந்து மக்களை புலம்ப வைத்து வரும் தங்கம் விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
{{comments.comment}}