சென்னை: நெல்லை, தூத்துக்குடியில் வெளுத்து வாங்கி வரும் மழையானது இன்று இரவு வரை தொடரும். நாளை காலை முதல் மழை நின்று விடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு ஊர்களுக்குள் புகுந்துள்ளது. நெல்லையில் பல இடங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் கூறுகையில், இன்று இரவு வரை மழை நீடிக்கும். நாளை காலை முதல் மழை நின்று விடும். இந்த மாவட்டங்களைப் பொறுத்தவரை பற்றாக்குறை வட கிழக்குப் பருவ மழைதான் பெய்துள்ளது. பல அணைகள் நிரம்பவே இல்லை.
தூத்துக்குடியில் வெள்ளம் வருமோ என்ற அச்சமே தேவையில்லை. காரணம், பாபநாசம் (41சதவீதமே நிரம்பியுள்ளது), மணிமுத்தாறு (56 சதவீதமே நிரம்பியுள்ளது) அணைகள் இன்னும் முழுமையாக நிரம்பவில்லை. எனவே தண்ணீர் திறந்து விடப்பட வாய்ப்பில்லை. அந்த அணைகள் நிரம்பினால்தான் அதிக அளவிலான தண்ணீர் வெளியேற்றத்தை எதிர்பார்க்க முடியும். மேலும் தென்காசி அணைகளிலிருந்து வரும் தண்ணீரும் குறைந்து விட்டது. தற்போது தாமிரபணியில் ஓடிக் கொண்டிருக்கும் தண்ணீரும் மழை நின்றதும், நாளை குறைந்து விடும்.
வட கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 17ம் தேதிக்குப் பிறகு நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை இதுகுறித்த தெளிவான நிலை தெரிய வரும் என்று கூறியுள்ளார் பிரதீப் ஜான்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு பணியாது... நாம் ஒன்றாக எழுவோம்.. இது ஓரணி vs டெல்லி அணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை: டாக்டர் அன்புமணி!
என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்
அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு
ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
சாதனை இந்தியர் சுபான்ஷு சுக்லா.. 14ம் தேதி பூமி திரும்புகிறார்.. தடபுடலாக வரவேற்கத் தயாராகும் நாசா!
தேனியில் விவசாயிகளுடன் இணைந்து ஆடு மாடு மேய்ப்பேன்.. சீமானின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு!
அதிவேக இணையத்தில் ஜப்பான் புதிய உலக சாதனை.. இந்தியாவை விட 16 மில்லியன் மடங்கு அதிகம்!
ஆட்சித்திறனுக்காக நோபல் பரிசு தந்தால் அதை எனக்குத் தரலாம்.. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி
{{comments.comment}}