நெல்லை, தூத்துக்குடியில் இரவு வரை மழை தொடரும்.. நாளை குறையும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

Dec 14, 2024,04:14 PM IST

சென்னை: நெல்லை, தூத்துக்குடியில் வெளுத்து வாங்கி வரும் மழையானது இன்று இரவு வரை தொடரும். நாளை காலை முதல் மழை நின்று விடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு ஊர்களுக்குள் புகுந்துள்ளது. நெல்லையில் பல இடங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.




இந்த நிலையில் மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் கூறுகையில், இன்று இரவு வரை மழை நீடிக்கும். நாளை காலை முதல் மழை நின்று விடும். இந்த மாவட்டங்களைப் பொறுத்தவரை பற்றாக்குறை வட கிழக்குப் பருவ மழைதான் பெய்துள்ளது. பல அணைகள் நிரம்பவே இல்லை.


தூத்துக்குடியில் வெள்ளம் வருமோ என்ற அச்சமே தேவையில்லை. காரணம், பாபநாசம் (41சதவீதமே நிரம்பியுள்ளது), மணிமுத்தாறு (56 சதவீதமே நிரம்பியுள்ளது) அணைகள் இன்னும் முழுமையாக நிரம்பவில்லை. எனவே தண்ணீர் திறந்து விடப்பட வாய்ப்பில்லை.  அந்த அணைகள் நிரம்பினால்தான் அதிக அளவிலான தண்ணீர் வெளியேற்றத்தை எதிர்பார்க்க முடியும். மேலும் தென்காசி அணைகளிலிருந்து வரும் தண்ணீரும் குறைந்து விட்டது.  தற்போது தாமிரபணியில் ஓடிக் கொண்டிருக்கும் தண்ணீரும் மழை நின்றதும், நாளை குறைந்து விடும்.


வட கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 17ம் தேதிக்குப் பிறகு நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை இதுகுறித்த தெளிவான நிலை தெரிய வரும் என்று கூறியுள்ளார் பிரதீப் ஜான்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்