சென்னை: நெல்லை, தூத்துக்குடியில் வெளுத்து வாங்கி வரும் மழையானது இன்று இரவு வரை தொடரும். நாளை காலை முதல் மழை நின்று விடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு ஊர்களுக்குள் புகுந்துள்ளது. நெல்லையில் பல இடங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் கூறுகையில், இன்று இரவு வரை மழை நீடிக்கும். நாளை காலை முதல் மழை நின்று விடும். இந்த மாவட்டங்களைப் பொறுத்தவரை பற்றாக்குறை வட கிழக்குப் பருவ மழைதான் பெய்துள்ளது. பல அணைகள் நிரம்பவே இல்லை.
தூத்துக்குடியில் வெள்ளம் வருமோ என்ற அச்சமே தேவையில்லை. காரணம், பாபநாசம் (41சதவீதமே நிரம்பியுள்ளது), மணிமுத்தாறு (56 சதவீதமே நிரம்பியுள்ளது) அணைகள் இன்னும் முழுமையாக நிரம்பவில்லை. எனவே தண்ணீர் திறந்து விடப்பட வாய்ப்பில்லை. அந்த அணைகள் நிரம்பினால்தான் அதிக அளவிலான தண்ணீர் வெளியேற்றத்தை எதிர்பார்க்க முடியும். மேலும் தென்காசி அணைகளிலிருந்து வரும் தண்ணீரும் குறைந்து விட்டது. தற்போது தாமிரபணியில் ஓடிக் கொண்டிருக்கும் தண்ணீரும் மழை நின்றதும், நாளை குறைந்து விடும்.
வட கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 17ம் தேதிக்குப் பிறகு நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை இதுகுறித்த தெளிவான நிலை தெரிய வரும் என்று கூறியுள்ளார் பிரதீப் ஜான்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளும் வெளியானது.. தேர்ச்சி விகிதம் மொத்தம் 92.09% !
தமிழ்நாட்டில்.. மே மாத இறுதியில் கோடை வெயில்.. இயல்பை விட குறையும்.. தமிழ்நாடு வெதர்மேன்!
தமிழகத்தில் 10வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.. வழக்கம் போல மாணவியரே அதிகம் பாஸ்!
பொள்ளாச்சி வழக்கில்.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க.. முதல்வர் உத்தரவு..!
என் குழந்தைகள் என் உயிர்.. என்னிடமிருந்து பிரிக்க முயன்றார்கள்.. நடிகர் ரவி மோகன் பரபரப்பு அறிக்கை
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 52 சதவீதம் குற்றங்கள் அதிகரிப்பு..பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்ய வேண்டாம்...ஆப்பிள் சிஇஓ.,க்கு டிரம்ப் உத்தரவு
cyclone shakthi பெங்களூருக்கு ஆரஞ்சு அலர்ட்...புயல் காற்றுடன் மழை வெளுக்க போகுதாம்
இந்தியாவில் அமலுக்கு வந்தது.. பயோ மெட்ரிக் விவரங்கள் அடங்கிய இ-பாஸ்போர்ட்..!
{{comments.comment}}