சென்னை: பத்தாம் வகுப்பு பொது தேர்வில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. விருப்ப பாடத்திற்கும் தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயித்து தமிழக பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வு முறையில் பள்ளி கல்வித்துறை அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. மலையாளம், இந்தி, உருது உள்ளிட்ட மொழிகளை விருப்பப்படமாக தேர்வு செய்யும் மாணவர்களுக்கு அதில் தேர்ச்சி பெறுவதும், பத்தாம் வகுப்பு பொது தேர்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பில் விருப்ப பாடமாக எடுக்கும் பாடத்திற்கு கட்டாயம் மதிப்பெண் எதுவும் இதுவரை நிர்ணயம் செய்யவில்லை. அதாவது பாஸ் மார்க் என்று எதுவும் இல்லை. 10 வகுப்பு சான்றிதழிழிலும் மதிப்பெண் விவரம் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிறுபான்மை மொழி அமைப்புகளை சேர்ந்த சிலர், விருப்ப பாடத்திற்கும் உரிய மதிப்பெண் தர வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை தொடர்ந்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு அளித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விருப்ப பாடத்திற்கும் தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயித்து தமிழக பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், தமிழை தாய் மொழியாகக் கொண்டு விருப்ப பாடம் தேர்வு செய்யாத 10ம் வகுப்பு மாணவர்கள் தற்போதுள்ள வழக்கப்படி ஐந்து பாடங்களில் தேர்ச்சி பெற்றால் போதும். ஆனால் தமிழ் அல்லது ஆங்கிலத்தை தாய் மொழியாக கொள்ளாத மாணவர்கள் இனி விருப்பப்படத்திலும் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.
அந்த வகையில் விருப்ப பாடத்திற்கான தேர்ச்சி மதிப்பெண் 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ் அல்லாத சிறுபான்மை பள்ளியில் பயிலும் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உடன் விருப்ப பாடத்திற்கான தேர்ச்சி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி உருது, தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட விருப்ப படங்களில் பெரும் மதிப்பெண்களும் இனி சான்றிதழ்களில் அச்சிட்டு தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு இதுவரை உள்ள நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. அடுத்த கல்வி ஆண்டிலிருந்து தான் இந்த புதிய நடைமுறை செயல்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!
"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு
4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு
"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
{{comments.comment}}