சென்னை: பத்தாம் வகுப்பு பொது தேர்வில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. விருப்ப பாடத்திற்கும் தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயித்து தமிழக பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வு முறையில் பள்ளி கல்வித்துறை அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. மலையாளம், இந்தி, உருது உள்ளிட்ட மொழிகளை விருப்பப்படமாக தேர்வு செய்யும் மாணவர்களுக்கு அதில் தேர்ச்சி பெறுவதும், பத்தாம் வகுப்பு பொது தேர்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பில் விருப்ப பாடமாக எடுக்கும் பாடத்திற்கு கட்டாயம் மதிப்பெண் எதுவும் இதுவரை நிர்ணயம் செய்யவில்லை. அதாவது பாஸ் மார்க் என்று எதுவும் இல்லை. 10 வகுப்பு சான்றிதழிழிலும் மதிப்பெண் விவரம் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிறுபான்மை மொழி அமைப்புகளை சேர்ந்த சிலர், விருப்ப பாடத்திற்கும் உரிய மதிப்பெண் தர வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை தொடர்ந்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு அளித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விருப்ப பாடத்திற்கும் தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயித்து தமிழக பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், தமிழை தாய் மொழியாகக் கொண்டு விருப்ப பாடம் தேர்வு செய்யாத 10ம் வகுப்பு மாணவர்கள் தற்போதுள்ள வழக்கப்படி ஐந்து பாடங்களில் தேர்ச்சி பெற்றால் போதும். ஆனால் தமிழ் அல்லது ஆங்கிலத்தை தாய் மொழியாக கொள்ளாத மாணவர்கள் இனி விருப்பப்படத்திலும் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.
அந்த வகையில் விருப்ப பாடத்திற்கான தேர்ச்சி மதிப்பெண் 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ் அல்லாத சிறுபான்மை பள்ளியில் பயிலும் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உடன் விருப்ப பாடத்திற்கான தேர்ச்சி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி உருது, தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட விருப்ப படங்களில் பெரும் மதிப்பெண்களும் இனி சான்றிதழ்களில் அச்சிட்டு தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு இதுவரை உள்ள நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. அடுத்த கல்வி ஆண்டிலிருந்து தான் இந்த புதிய நடைமுறை செயல்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
Laborious Labourers.. கை கொடுப்போம்.. கடின உழைப்பாளிகளுக்கு!
{{comments.comment}}