சென்னை: பத்தாம் வகுப்பு பொது தேர்வில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. விருப்ப பாடத்திற்கும் தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயித்து தமிழக பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வு முறையில் பள்ளி கல்வித்துறை அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. மலையாளம், இந்தி, உருது உள்ளிட்ட மொழிகளை விருப்பப்படமாக தேர்வு செய்யும் மாணவர்களுக்கு அதில் தேர்ச்சி பெறுவதும், பத்தாம் வகுப்பு பொது தேர்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பில் விருப்ப பாடமாக எடுக்கும் பாடத்திற்கு கட்டாயம் மதிப்பெண் எதுவும் இதுவரை நிர்ணயம் செய்யவில்லை. அதாவது பாஸ் மார்க் என்று எதுவும் இல்லை. 10 வகுப்பு சான்றிதழிழிலும் மதிப்பெண் விவரம் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிறுபான்மை மொழி அமைப்புகளை சேர்ந்த சிலர், விருப்ப பாடத்திற்கும் உரிய மதிப்பெண் தர வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை தொடர்ந்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு அளித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விருப்ப பாடத்திற்கும் தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயித்து தமிழக பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், தமிழை தாய் மொழியாகக் கொண்டு விருப்ப பாடம் தேர்வு செய்யாத 10ம் வகுப்பு மாணவர்கள் தற்போதுள்ள வழக்கப்படி ஐந்து பாடங்களில் தேர்ச்சி பெற்றால் போதும். ஆனால் தமிழ் அல்லது ஆங்கிலத்தை தாய் மொழியாக கொள்ளாத மாணவர்கள் இனி விருப்பப்படத்திலும் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.
அந்த வகையில் விருப்ப பாடத்திற்கான தேர்ச்சி மதிப்பெண் 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ் அல்லாத சிறுபான்மை பள்ளியில் பயிலும் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உடன் விருப்ப பாடத்திற்கான தேர்ச்சி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி உருது, தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட விருப்ப படங்களில் பெரும் மதிப்பெண்களும் இனி சான்றிதழ்களில் அச்சிட்டு தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு இதுவரை உள்ள நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. அடுத்த கல்வி ஆண்டிலிருந்து தான் இந்த புதிய நடைமுறை செயல்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?
தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு
சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்
திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!
கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்
70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?
நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!
{{comments.comment}}