ஏழை பிள்ளைகளை கூலி தொழிலுக்கு அனுப்பும் திட்டமே புதிய கல்விக் கொள்கை திட்டம்.. சபாநாயகர் அப்பாவு

Feb 21, 2025,05:59 PM IST

ராமநாதபுரம்: சாமானிய மக்களின் ஏழை பிள்ளைகளை படிக்கவிடாமல் கூலி தொழிலுக்கு அனுப்புகிற திட்டம் தான் புதிய கல்விக்கொள்கை திட்டம் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.


ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி - பணகுடி பேரூராட்சிக்கு உட்பட்ட நதிப்பாறையில்  சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 13 இலட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடை கட்டிடத்தை திறந்து வைத்தார் சபாநாயகர் அப்பாவு. அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், சாமானிய மக்களின் ஏழை பிள்ளைகளை படிக்கவிடாமல் கூலி தொழிலுக்கு அனுப்புகிற திட்டம் தான் புதிய கல்விக்கொள்கை திட்டம். இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று நமது முதல்வர் தெளிவாக சொல்லிவிட்டார்.


இந்த திட்டத்தை 2022ல் பீகார் மாநிலம் ஏற்றுக்கொண்டது. பீகார் மாநிலத்தில் இத்திட்டத்தை ஏற்றுக்கொண்ட போது 51 சதவீதம் பேர் பள்ளிக்கு வந்தனர். இதை ஏற்றுக்கொண்ட பின்னர் தற்போது இந்தாண்டு 31 சதவீதம் பேர் பள்ளிக்கு வந்துள்ளனர். 20 சதவீதம் தோல்வியுற்ற பிள்ளைகளை வீட்டிற்கு அனுப்பி விட்டனர். இதனால் அந்த பிள்ளைகள் கூலி தொழிலுக்கு செல்கின்றனர். சாமானிய ஏழை பிள்ளைகளை படிக்க விடாமல் கூலி தொழிலுக்கு அனுப்பும் திட்டம் தான் புதிய கல்வி கொள்கை திட்டம். இதனால், இத்திட்டத்தை தமிழக முதல்வர் ஏற்றுக்கொள்ள மாட்டார்.




இந்தியை மட்டும் படித்து தமிழை அழிக்க வேண்டும் என்பதற்காகவே மூன்றாவது மொழி படிக்க கூறுகின்றனர். மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்காது. எங்கள் பிள்ளைகள் தமிழ், ஆங்கிலம் படித்தே உலகம் முழுவதும் வேலைக்குச் செல்கின்றனர்.  'சமக்ர சிக்க்ஷா' போன்ற திட்டங்கள் மூலம் ஒன்றிய அரசு மும்மொழிக் கொள்கையை திணிக்கிறது.


உலகில் தோன்றிய முதல் 3 மொழிகளில் ஒரு மொழி தான் தமிழ் மொழி. இன்றும் அறியாமல் இருக்கின்ற மொழி. பல நாடுகளில் ஆட்சி மொழியாக இருக்கிறது தமிழ்மொழி. இந்த மொழியை அழிப்பதற்கு தான் இந்தி மொழி திணிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியில்லை; ஆனால்...: நடிகர் லாரன்ஸ் சொன்னது என்ன?

news

காற்றே உன் பெயரைக் கேட்டேன்

news

அண்ணாமலைக்கு எதிரான அவதூறு வழக்கு: திடீரென வாபஸ் பெற்ற டி.ஆர்.பாலு

news

அதிமுகவிலிருந்து விலகி.. தவெக.வில் இணையும் 2 விஜயபாஸ்கர்கள்...அடுத்து என்ன நடக்கும்?

news

அதிமுக.,வில் மீண்டும் பரபரப்பு: இபிஎஸ் கூட்டத்தை புறக்கணிக்க வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் முடிவு?

news

முதல்வர் விஜய் தலைமையிலான.. தவெக அரசு கவிழ வாய்ப்பே இல்லை : திருமாவளவன் உறுதி

news

புறக்கணிப்பின் உச்சமும், ஒப்பீட்டின் வன்மமும்.. ராமநாதபுரம் கொடூரக் கொலையின் உளவியல் பின்னணி!

news

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்கள்...காலியான 7 தொகுதிகள்

news

அரசு வேலை மோசடி : திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்