ராமநாதபுரம்: சாமானிய மக்களின் ஏழை பிள்ளைகளை படிக்கவிடாமல் கூலி தொழிலுக்கு அனுப்புகிற திட்டம் தான் புதிய கல்விக்கொள்கை திட்டம் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி - பணகுடி பேரூராட்சிக்கு உட்பட்ட நதிப்பாறையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 13 இலட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடை கட்டிடத்தை திறந்து வைத்தார் சபாநாயகர் அப்பாவு. அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், சாமானிய மக்களின் ஏழை பிள்ளைகளை படிக்கவிடாமல் கூலி தொழிலுக்கு அனுப்புகிற திட்டம் தான் புதிய கல்விக்கொள்கை திட்டம். இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று நமது முதல்வர் தெளிவாக சொல்லிவிட்டார்.
இந்த திட்டத்தை 2022ல் பீகார் மாநிலம் ஏற்றுக்கொண்டது. பீகார் மாநிலத்தில் இத்திட்டத்தை ஏற்றுக்கொண்ட போது 51 சதவீதம் பேர் பள்ளிக்கு வந்தனர். இதை ஏற்றுக்கொண்ட பின்னர் தற்போது இந்தாண்டு 31 சதவீதம் பேர் பள்ளிக்கு வந்துள்ளனர். 20 சதவீதம் தோல்வியுற்ற பிள்ளைகளை வீட்டிற்கு அனுப்பி விட்டனர். இதனால் அந்த பிள்ளைகள் கூலி தொழிலுக்கு செல்கின்றனர். சாமானிய ஏழை பிள்ளைகளை படிக்க விடாமல் கூலி தொழிலுக்கு அனுப்பும் திட்டம் தான் புதிய கல்வி கொள்கை திட்டம். இதனால், இத்திட்டத்தை தமிழக முதல்வர் ஏற்றுக்கொள்ள மாட்டார்.
இந்தியை மட்டும் படித்து தமிழை அழிக்க வேண்டும் என்பதற்காகவே மூன்றாவது மொழி படிக்க கூறுகின்றனர். மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்காது. எங்கள் பிள்ளைகள் தமிழ், ஆங்கிலம் படித்தே உலகம் முழுவதும் வேலைக்குச் செல்கின்றனர். 'சமக்ர சிக்க்ஷா' போன்ற திட்டங்கள் மூலம் ஒன்றிய அரசு மும்மொழிக் கொள்கையை திணிக்கிறது.
உலகில் தோன்றிய முதல் 3 மொழிகளில் ஒரு மொழி தான் தமிழ் மொழி. இன்றும் அறியாமல் இருக்கின்ற மொழி. பல நாடுகளில் ஆட்சி மொழியாக இருக்கிறது தமிழ்மொழி. இந்த மொழியை அழிப்பதற்கு தான் இந்தி மொழி திணிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!
பாஜக தேர்வு செய்த வேட்பாளர் தமிழர் என்பதாலேயே ஆதரிக்க முடியுமா?: திமுக எம்பி கனிமொழி!
சபாஷ் செம போட்டி.. துணை ஜனாதிபதி தேர்தலில்.. ஆப்பை அப்படியே பாஜக பக்கம் திருப்பி விட்ட காங்.!
ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு ஓட்டுனரை மிரட்டுவதா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
உப்பு அதிகம் சாப்பிட்டால் கிட்னி பாதிக்கப்படுமா.. மருத்துவர்கள் சொல்வது என்ன?
அன்புமணி பதிலளிக்க தவறினால் என்ன நடக்கும்?.. டாக்டர் ராமதாஸின் அடுத்தடுத்த அதிரடி!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி தேர்வு!
சிறுநீரகக் கொள்ளை தீரும் முன்பே கல்லீரல் திருட்டு.. இது தான் திமுகவின் சாதனையா?: டாக்டர் அன்புமணி
மும்பையை உலுக்கி எடுத்த கன மழை.. நவி மும்பையின் பல பகுதிகளில் வெள்ளக்காடு!
{{comments.comment}}