ஏழை பிள்ளைகளை கூலி தொழிலுக்கு அனுப்பும் திட்டமே புதிய கல்விக் கொள்கை திட்டம்.. சபாநாயகர் அப்பாவு

Feb 21, 2025,05:59 PM IST

ராமநாதபுரம்: சாமானிய மக்களின் ஏழை பிள்ளைகளை படிக்கவிடாமல் கூலி தொழிலுக்கு அனுப்புகிற திட்டம் தான் புதிய கல்விக்கொள்கை திட்டம் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.


ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி - பணகுடி பேரூராட்சிக்கு உட்பட்ட நதிப்பாறையில்  சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 13 இலட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடை கட்டிடத்தை திறந்து வைத்தார் சபாநாயகர் அப்பாவு. அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், சாமானிய மக்களின் ஏழை பிள்ளைகளை படிக்கவிடாமல் கூலி தொழிலுக்கு அனுப்புகிற திட்டம் தான் புதிய கல்விக்கொள்கை திட்டம். இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று நமது முதல்வர் தெளிவாக சொல்லிவிட்டார்.


இந்த திட்டத்தை 2022ல் பீகார் மாநிலம் ஏற்றுக்கொண்டது. பீகார் மாநிலத்தில் இத்திட்டத்தை ஏற்றுக்கொண்ட போது 51 சதவீதம் பேர் பள்ளிக்கு வந்தனர். இதை ஏற்றுக்கொண்ட பின்னர் தற்போது இந்தாண்டு 31 சதவீதம் பேர் பள்ளிக்கு வந்துள்ளனர். 20 சதவீதம் தோல்வியுற்ற பிள்ளைகளை வீட்டிற்கு அனுப்பி விட்டனர். இதனால் அந்த பிள்ளைகள் கூலி தொழிலுக்கு செல்கின்றனர். சாமானிய ஏழை பிள்ளைகளை படிக்க விடாமல் கூலி தொழிலுக்கு அனுப்பும் திட்டம் தான் புதிய கல்வி கொள்கை திட்டம். இதனால், இத்திட்டத்தை தமிழக முதல்வர் ஏற்றுக்கொள்ள மாட்டார்.




இந்தியை மட்டும் படித்து தமிழை அழிக்க வேண்டும் என்பதற்காகவே மூன்றாவது மொழி படிக்க கூறுகின்றனர். மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்காது. எங்கள் பிள்ளைகள் தமிழ், ஆங்கிலம் படித்தே உலகம் முழுவதும் வேலைக்குச் செல்கின்றனர்.  'சமக்ர சிக்க்ஷா' போன்ற திட்டங்கள் மூலம் ஒன்றிய அரசு மும்மொழிக் கொள்கையை திணிக்கிறது.


உலகில் தோன்றிய முதல் 3 மொழிகளில் ஒரு மொழி தான் தமிழ் மொழி. இன்றும் அறியாமல் இருக்கின்ற மொழி. பல நாடுகளில் ஆட்சி மொழியாக இருக்கிறது தமிழ்மொழி. இந்த மொழியை அழிப்பதற்கு தான் இந்தி மொழி திணிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!

news

திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!

news

சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்

news

நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

news

காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம்.. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்!

news

கோவை வரும் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!

news

சார் படிவத்தை நிரப்புவதில் குழப்பமா.. கவலைப்படாதீங்க.. சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு

news

வாட்ஸ் ஆப்புக்கு வந்துருச்சு ஆப்பு.. எலான் மஸ்கின் X-சாட் தான் டாப்பாமே.. மக்கா!

news

SIR பணிகளைப் புறக்கணித்து.. போராட்டத்தில் குதித்த வருவாய்த்துறை ஊழியர்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்