New Low pressure.. வங்க கடலில்.. மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி.. நாளை உருவாகிறது!

Dec 06, 2024,10:35 AM IST

சென்னை: ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் நாளை வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தென்கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டு வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த மாதம் 29ஆம் தேதி ஃபெஞ்சல் புயலாக உருவானது. இதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அதிக கன மழை முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்தது. மீனவர்கள் மீன் பிடி தொழிலை இழந்து தவித்தனர். மறுபக்கம் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.




குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்த அதீத கன மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்புகள் தண்ணீர் சூழ்ந்தது. நகரின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின. முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன. மக்கள் உடைமைகளை இழந்து கடும்  சிரமத்திற்கு உள்ளாகினர். மழைநீர் மெல்ல மெல்ல வடிந்து தற்போது தான் நிலைமை சீராகி உள்ளது.


இந்த நிலையில் வங்க கடலில் மீண்டும் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு வங்கக் கடலின் மத்தியில் உருவாகும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகரக்கூடும் எனவும், இது டிசம்பர் 12ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  வலுவடைந்து தமிழக- இலங்கை கடலோரப் பகுதிகளை அடையக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.


இது புயலாக மாறுமா, ஃபெஞ்சல் புயலைப் போல அதீத மழையைக் கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் டிசம்பர் மாதத்தில் வழக்கத்தை விட அதி தீவிர மழை கிடைக்கும் என்று பல்வேறு வானிலை ஆர்வலர்களும்  தெரிவித்துள்ளதால், புதிய காற்றழுத்தத் தாழ்வால் நல்ல மழை கிடைக்க வாய்ப்புண்டு என்று எதிர்பார்க்கலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்