சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதால், தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது. தாய்லாந்து வளைகுடாவில் உள்ள சூறாவளி சுழற்சி காற்று தென்மேற்கு நோக்கி சாய்ந்து மத்திய வெப்பமண்டல நிலைகள் வரை நீண்டுள்ளதாக கூறப்படுகிறது.
வடகிழக்கு காற்று தென்கிழக்கு தீபகற்ப இந்தியாவின் பக்கம் வீச உள்ளது. இதன் காரணமாக நவம்பர் 14,15,16 அதிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. ஒரு சில இடங்களிலில் இடியுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 7 நாட்களுக்கு அந்தமான் நிக்கோபார் தீவுகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நவம்பர் 14,15 ஆகிய தேதிகளில் ஆந்திரா, ஏனாம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் நவம்பர் 15,16 ஆகிய தேதிகளில் கேரளா மற்றும் மாஹேவிலும் கனமழை உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தென்மேற்கு, அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா, அந்தமான், மேற்கு மத்திய வங்காள விரிகுடா , அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்காள விரிகுடா பகுதிகளிலும் மழை பெய்யும். நவம்பர் 15,16 தேதிகளில் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் மீது காற்றின் வேகம் மணிக்கு 40-45 கி.மீ. முதல் 55 கி.மீ வரை வீசக்கூடும் எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}