சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது தற்போது உருவாக ஆரம்பித்து விட்டதாக தமிழ்நாடு வெதர்மேன் தகவல் வெளியிட்டுள்ளார்.
வட கிழக்குப் பருவ மழையின் அடுத்த முக்கிய கட்டம் தொடங்கவுள்ளது. அதாவது புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகவுள்ளதாக சில நாட்களாக வானிலை மையம் அறிவித்து வந்தது. தற்போது அது உருவாகத் தொடங்கி விட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், நிக்கோபார் தீவுகள் - பண்டா அசே அருகே காற்றழுத்தத் தாழ்வு உருவாகத் தொடங்கியுள்ளது. இது மேலும் தீவிரமடைந்து மேற்கு வட மேற்கு திசையில் நகரக் கூடும். இருப்பினும் இதன் போக்கு குறித்து ஞாயிற்றுக்கிழமைதான் நமக்கு தெளிவாக தெரிய வரும்.

இப்போதே இதற்கு பெயரிடுவது சரியாக இருக்காது. வானிலை மையம்தான் அதற்கு பெயரிட முடியும். ஒரு வேளை இந்த தீவிரமடையாமல் தொடர்ந்து காற்றழுத்தமாகவே இருந்தால் என்னாகும்.. எனவே இப்போதே பெயரிடாதீர்கள் என்று கூறியுள்ளார் பிரதீப் ஜான்.
இருப்பினும் இந்த குறைந்த காற்றழுத்தத்தால் தமிழ்நாட்டுக்கு நல்ல மழை கிடைக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இயல்பான அளவிலிருந்து சற்று கூடுதலாக வட கிழக்குப் பருவ மழை கிடைத்துள்ளது. தோராயமாக 6 சதவீதம் கூடுதல் மழை கிடைத்துள்ளது. பகுதி பகுதியாக வட கிழக்குப் பருவ மழை தமிழ்நாட்டுக்கு நல்ல மழையைக் கொடுத்து வருகிறது.
தென் மாவட்டங்களில் நல்ல மழை கிடைத்துள்ளது. டெல்டாவிலும் நல்ல மழைப்பொழிவு காணப்பட்டது. மேற்கு மாவட்டங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் மழை பெய்துள்ளது. வட மாவட்டங்களைப் பொறுத்தவரை இதுவரை நார்மலாகவே பெய்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
3 உதயசூரியன்.. ஒரு தனிச் சின்னம்.. ஆக மொத்தம் மதிமுகவுக்கு 4 சீட்.. 2 தொகுதிகள் குறைவு!
ஐபிஎல் 2026: முதல் கட்ட அட்டவணை வெளியீடு.. பெங்களூருவில் தொடக்க ஆட்டம்.. சென்னைக்கு எப்போ?
துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் காயம்
தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?
ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்
தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு
பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்
நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!
திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
{{comments.comment}}