நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

Nov 22, 2024,09:52 AM IST

சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது தற்போது உருவாக ஆரம்பித்து விட்டதாக தமிழ்நாடு வெதர்மேன் தகவல் வெளியிட்டுள்ளார்.


வட கிழக்குப் பருவ மழையின் அடுத்த முக்கிய கட்டம் தொடங்கவுள்ளது. அதாவது புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகவுள்ளதாக சில நாட்களாக வானிலை மையம் அறிவித்து வந்தது. தற்போது அது உருவாகத் தொடங்கி விட்டது.


இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், நிக்கோபார் தீவுகள் - பண்டா அசே அருகே காற்றழுத்தத் தாழ்வு உருவாகத் தொடங்கியுள்ளது. இது மேலும் தீவிரமடைந்து மேற்கு வட மேற்கு திசையில் நகரக் கூடும். இருப்பினும் இதன் போக்கு குறித்து ஞாயிற்றுக்கிழமைதான் நமக்கு தெளிவாக தெரிய வரும்.




இப்போதே இதற்கு பெயரிடுவது சரியாக இருக்காது. வானிலை மையம்தான் அதற்கு பெயரிட முடியும். ஒரு வேளை இந்த தீவிரமடையாமல் தொடர்ந்து காற்றழுத்தமாகவே இருந்தால் என்னாகும்.. எனவே இப்போதே பெயரிடாதீர்கள் என்று கூறியுள்ளார் பிரதீப் ஜான்.


இருப்பினும் இந்த குறைந்த காற்றழுத்தத்தால் தமிழ்நாட்டுக்கு நல்ல மழை கிடைக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இயல்பான அளவிலிருந்து சற்று கூடுதலாக வட கிழக்குப் பருவ மழை கிடைத்துள்ளது. தோராயமாக 6 சதவீதம் கூடுதல் மழை கிடைத்துள்ளது. பகுதி பகுதியாக வட கிழக்குப் பருவ மழை தமிழ்நாட்டுக்கு நல்ல மழையைக் கொடுத்து வருகிறது. 


தென் மாவட்டங்களில் நல்ல மழை கிடைத்துள்ளது. டெல்டாவிலும் நல்ல மழைப்பொழிவு காணப்பட்டது. மேற்கு மாவட்டங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் மழை பெய்துள்ளது. வட மாவட்டங்களைப் பொறுத்தவரை இதுவரை நார்மலாகவே பெய்துள்ளது. 



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்