நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

Nov 22, 2024,09:52 AM IST

சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது தற்போது உருவாக ஆரம்பித்து விட்டதாக தமிழ்நாடு வெதர்மேன் தகவல் வெளியிட்டுள்ளார்.


வட கிழக்குப் பருவ மழையின் அடுத்த முக்கிய கட்டம் தொடங்கவுள்ளது. அதாவது புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகவுள்ளதாக சில நாட்களாக வானிலை மையம் அறிவித்து வந்தது. தற்போது அது உருவாகத் தொடங்கி விட்டது.


இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், நிக்கோபார் தீவுகள் - பண்டா அசே அருகே காற்றழுத்தத் தாழ்வு உருவாகத் தொடங்கியுள்ளது. இது மேலும் தீவிரமடைந்து மேற்கு வட மேற்கு திசையில் நகரக் கூடும். இருப்பினும் இதன் போக்கு குறித்து ஞாயிற்றுக்கிழமைதான் நமக்கு தெளிவாக தெரிய வரும்.




இப்போதே இதற்கு பெயரிடுவது சரியாக இருக்காது. வானிலை மையம்தான் அதற்கு பெயரிட முடியும். ஒரு வேளை இந்த தீவிரமடையாமல் தொடர்ந்து காற்றழுத்தமாகவே இருந்தால் என்னாகும்.. எனவே இப்போதே பெயரிடாதீர்கள் என்று கூறியுள்ளார் பிரதீப் ஜான்.


இருப்பினும் இந்த குறைந்த காற்றழுத்தத்தால் தமிழ்நாட்டுக்கு நல்ல மழை கிடைக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இயல்பான அளவிலிருந்து சற்று கூடுதலாக வட கிழக்குப் பருவ மழை கிடைத்துள்ளது. தோராயமாக 6 சதவீதம் கூடுதல் மழை கிடைத்துள்ளது. பகுதி பகுதியாக வட கிழக்குப் பருவ மழை தமிழ்நாட்டுக்கு நல்ல மழையைக் கொடுத்து வருகிறது. 


தென் மாவட்டங்களில் நல்ல மழை கிடைத்துள்ளது. டெல்டாவிலும் நல்ல மழைப்பொழிவு காணப்பட்டது. மேற்கு மாவட்டங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் மழை பெய்துள்ளது. வட மாவட்டங்களைப் பொறுத்தவரை இதுவரை நார்மலாகவே பெய்துள்ளது. 



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்