ஆங்கில புத்தாண்டு 2025 ராசிப்பலன் : ரிஷப ராசி வாசகர்களே.. உங்களது எண்ணங்கள் ஒவ்வொன்றாக ஈடேறும்!

Dec 13, 2024,10:46 AM IST

பேச்சுத்திறமையால் மற்றவர்களை கவரும் தன்மை கொண்டவர்கள் உங்களுக்கு பிறக்க போகும் புத்தாண்டு தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுக்கும். பலம், பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். 


எண்ணங்கள் ஒவ்வொன்றாக ஈடேற துவங்கும் வருடமாக 2025 உங்களுக்கு இருக்க போகிறது. எதிலும் நேரடி கவனமும், விடா முயற்சியும் வைப்பது அவசியம். பணியிடத்தில் ஏற்ற, இறக்கமான நிலை இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் வரலாம். மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். எதிரிகள் பலம் அதிகரிக்கலாம். கையெழுத்திடும் போது நன்கு படித்து விட்டு, கவனமாக இருப்பது நல்லது.




பண விஷயத்தில் அவசரம் காட்டாதீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பதால் குடும்பத்தில் அமைதி நிலைத்திருக்கும். சுப காரியங்கள் கைகூடும். வரவை  சேமிக்க பழகுங்கள். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம்.  மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது தேவையற்ற பிரச்சனைகளில் சிக்காமல் இருக்க வைக்கும்.


கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருங்கள். செய்யும் தொழில் இருந்த தேக்க நிலை மாறும். உழைப்பிற்கு ஏற்ற வளர்ச்சி இருக்கும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பொது இடுங்களில் வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்க வேண்டும். கலை துறையினருக்கு திறமை ஏற்ற வளர்ச்சி இருக்கும். வெளிநாட்டு பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். 


வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. சுளுக்கு, பல், மூட்டு பிரச்சனைகள் வரலாம். பரம்பரை நோய்களின் தாக்கம் படிப்படியாக குறையும். ஆரோக்கிய விஷயங்களில் கவனமுடன் இருக்க வேண்டும். வாகன பயணங்களின் போது நிதானம் அவசியம். உறவுகள் விஷயங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத பயணங்களால் சோர்வும், புதிய அனுபவமும் கிடைக்கும். 


பெண்களுக்கு குடும்பத்தில் உங்களின் ஆலோசனைக்கு தாமதமாக மதிப்பு கிடைக்கும். தம்பதிகள் புரிதலை அதிகரித்து கொள்வது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாள வேண்டும். 


புதிய ஆண்டுகளில் பெரிய அளவில் பிரச்சனைகள், பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க ஸ்ரீரங்கம் பெருமாளையும், தாயாரையும் வழிபட்டு வருவது நல்லது. பெருமாளை வழிபடுவதால் குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள், தடைகள் படிப்படியாக குறையும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்