ஆங்கில புத்தாண்டு 2025 ராசிப்பலன் : ரிஷப ராசி வாசகர்களே.. உங்களது எண்ணங்கள் ஒவ்வொன்றாக ஈடேறும்!

Dec 13, 2024,10:46 AM IST

பேச்சுத்திறமையால் மற்றவர்களை கவரும் தன்மை கொண்டவர்கள் உங்களுக்கு பிறக்க போகும் புத்தாண்டு தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுக்கும். பலம், பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். 


எண்ணங்கள் ஒவ்வொன்றாக ஈடேற துவங்கும் வருடமாக 2025 உங்களுக்கு இருக்க போகிறது. எதிலும் நேரடி கவனமும், விடா முயற்சியும் வைப்பது அவசியம். பணியிடத்தில் ஏற்ற, இறக்கமான நிலை இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் வரலாம். மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். எதிரிகள் பலம் அதிகரிக்கலாம். கையெழுத்திடும் போது நன்கு படித்து விட்டு, கவனமாக இருப்பது நல்லது.




பண விஷயத்தில் அவசரம் காட்டாதீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பதால் குடும்பத்தில் அமைதி நிலைத்திருக்கும். சுப காரியங்கள் கைகூடும். வரவை  சேமிக்க பழகுங்கள். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம்.  மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது தேவையற்ற பிரச்சனைகளில் சிக்காமல் இருக்க வைக்கும்.


கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருங்கள். செய்யும் தொழில் இருந்த தேக்க நிலை மாறும். உழைப்பிற்கு ஏற்ற வளர்ச்சி இருக்கும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பொது இடுங்களில் வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்க வேண்டும். கலை துறையினருக்கு திறமை ஏற்ற வளர்ச்சி இருக்கும். வெளிநாட்டு பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். 


வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. சுளுக்கு, பல், மூட்டு பிரச்சனைகள் வரலாம். பரம்பரை நோய்களின் தாக்கம் படிப்படியாக குறையும். ஆரோக்கிய விஷயங்களில் கவனமுடன் இருக்க வேண்டும். வாகன பயணங்களின் போது நிதானம் அவசியம். உறவுகள் விஷயங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத பயணங்களால் சோர்வும், புதிய அனுபவமும் கிடைக்கும். 


பெண்களுக்கு குடும்பத்தில் உங்களின் ஆலோசனைக்கு தாமதமாக மதிப்பு கிடைக்கும். தம்பதிகள் புரிதலை அதிகரித்து கொள்வது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாள வேண்டும். 


புதிய ஆண்டுகளில் பெரிய அளவில் பிரச்சனைகள், பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க ஸ்ரீரங்கம் பெருமாளையும், தாயாரையும் வழிபட்டு வருவது நல்லது. பெருமாளை வழிபடுவதால் குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள், தடைகள் படிப்படியாக குறையும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்