கல்யாணம் முடித்த கையோடு.. உண்ணாவிரதத்திற்கு வந்த பொண்ணும், மாப்பிள்ளையும்!

Aug 20, 2023,01:59 PM IST
சென்னை: திருமணம் முடித்த கையோடு நீட் தேர்வு எதிர்ப்பு உண்ணாவிரதத்தில் புது மண ஜோடி கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீட் தேர்வை எதிர்த்தும், இதுதொடர்பான சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்த ஆளுநரைக் கண்டித்தும், நீட் தேர்வை ஒழிக்காமல் இருக்கும் மத்தியஅரசைக் கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் இன்று திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சரும், இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து  கொண்டார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வருகை தந்த ஒரு ஜோடியால் கூட்டத்தில் கலகலப்பு ஏற்பட்டது. அவர்கள்தாான் அன்பானந்தம் - சொர்ணப்பிரியா தம்பதி.



இந்த இருவருக்கும் காலையில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற்றது. திமுக விவசாய அணி மாநிலதுணைச் செயலாளர் அரியப்பன் என்பவரின் மகன்தான் அன்பானந்தம். முதல்வர் தலைமையில் திருமணம் முடிந்ததும், அவர்களிடம் ஆசி பெற்று விட்டு நேராக வள்ளுவர் கோட்டம் வந்து விட்டது அன்பானந்தம் - சொர்ணப்பிரியா ஜோடி.

உண்ணாவிரத அறப்போராட்டத்தில் இணையர் இருவரும் மணக்கோலத்திலேயே பங்கேற்றது வியப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் போட்டுள்ள டிவீட்டில், நம் மாணவர்களின் கல்வி உரிமை காக்க, நீட் எதிர்ப்பு உண்ணாவிரத அறப்போரில் இணைந்த அன்பானந்தம் - சொர்ணப்பிரியா இணையரின் சமூக அக்கறை போற்றுதலுக்குரியது. இல்வாழ்வில் அடியெடுத்து வைக்கும் அவர்களை வாழ்த்தினோம் என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்