சென்னை: சென்னை மற்றும் திருப்பூரில் நடந்த என்.ஐ.ஏ சோதனையில் வங்கதேச நாட்டை சேர்ந்த சஹாபுதீன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையின் புறநகர்களான படப்பை, பள்ளிக்கரணை, மறைமலை நகர், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். முன்னரே பதிவு செய்யப்பட்டிருந்த வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.
இந்த சோதனையின் போது, படப்பையில் வசித்து வரும் சஹாபுதீன் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. போலி ஆதார் அட்டை தயாரித்து இந்தியாவில் ஊடுருவி பணி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று மறைமலைநகர் பகுதியில், ஜூஸ் கடையில் வேலை செய்து வந்த முன்னா, மற்றும் அவருடன் என்பவரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல திருப்பூரில் நடந்த சோதனையில் 4வது நபர் சிக்கினார்.
இந்தியர்களை போன்று போலி ஆவணங்களை தயாரித்து ஏன் வசித்து வந்தார்கள். இவர்களுக்கு யார் யாருடன் தொடர்பு இருக்கிறது. ஏன் இவ்வாறு செய்தார்கள் என்ற கோணத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
விசாரணைக்கு பின்னர் தான் முழுமையான தகவல் அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}