சென்னை, திருப்பூரில் என்.ஐ.ஏ சோதனை: 4 பேர் அதிரடி கைது

Nov 08, 2023,01:44 PM IST

சென்னை: சென்னை மற்றும் திருப்பூரில் நடந்த என்.ஐ.ஏ  சோதனையில் வங்கதேச நாட்டை சேர்ந்த சஹாபுதீன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சென்னையின் புறநகர்களான படப்பை, பள்ளிக்கரணை, மறைமலை நகர், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். முன்னரே பதிவு செய்யப்பட்டிருந்த வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. 


இந்த சோதனையின் போது, படப்பையில் வசித்து வரும் சஹாபுதீன் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. போலி ஆதார் அட்டை தயாரித்து இந்தியாவில் ஊடுருவி பணி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 




அதே போன்று மறைமலைநகர் பகுதியில், ஜூஸ் கடையில் வேலை செய்து வந்த முன்னா, மற்றும் அவருடன்  என்பவரும் கைது செய்யப்பட்டனர்.  இதேபோல திருப்பூரில் நடந்த சோதனையில் 4வது நபர் சிக்கினார்.


இந்தியர்களை போன்று போலி ஆவணங்களை தயாரித்து ஏன் வசித்து வந்தார்கள். இவர்களுக்கு யார் யாருடன் தொடர்பு இருக்கிறது. ஏன் இவ்வாறு செய்தார்கள் என்ற கோணத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். 




விசாரணைக்கு பின்னர் தான் முழுமையான தகவல் அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!

news

தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?

news

ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்

news

எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?

news

விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி

news

இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்

news

திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!

news

எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்

news

நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்