இளைஞர் அஜித்குமார் மீது புகார் அளித்த டாக்டர் மீது 2011ம் ஆண்டு மேசாடி புகார் பதிவு!

Jul 02, 2025,05:44 PM IST
திருப்புவனம்: திருப்புவனம் இளைஞர் அஜித் மீது நகை திருட்டு புகார் அளித்த டாக்டர் நிகிதா மீது 2011ம் ஆண்டு பண மோசடி புகாரில் வழக்கு பதிவாகியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல் போன விவகாரத்தில், போலீசாரால் அழைத்து செல்லப்பட்டார்.  அஜித்குமார் மீது எந்த வித வழக்கும் பதியாமல் போலீசார் கடுமையாக தாக்கி கொலை செய்தனர். 



விசாரணையின் போது வாயில் 5 முறை மிளகாய் பொடியைத் தூவி அடித்துள்ளனர்; அந்தரங்க உறுப்புகளிலும் மிளகாய் பொடியைக் கொட்டி கொடுமைப்படுத்தப்பட்டிருப்பதாக உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கில் பல்வேறு உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டங்களை தெரிவித்தும், திமுக அரசை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.

இந்த வழக்கின் விசாரணையின் போது மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பல கேள்விகளை கேட்டிருந்தார்.  காவல்துறை தரப்பில் செய்யப்பட்ட அநீதிகளை அவர் பட்டியலிட்டு கடுமையாக சாடியிருந்தார். இதனையடுத்து இந்த வழக்கு சிபிஐ வசம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மீது புகார் அளித்த டாக்டர் நிகிதா மீது ஏற்கனவே மோசடி வழக்கு பதியப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் வரை மோசடி செய்ததாக 2011ல் நிகிதா மீதும் அவரது தாயார் மீதும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2010இல் துணை முதல்வரின் உதவியாளரை எனக்கு தெரியும் என்று கூறி நிகிதா மோசடி செய்துள்ளார். அதுமட்டும் இன்றி பணத்தைக் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டபோது நிகிதாவின் குடும்பத்தினர் மிரட்டியதும் தற்போது தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

news

வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

அதிகம் பார்க்கும் செய்திகள்