நிலவு தூங்கும் நேரம்!

Jan 31, 2026,04:54 PM IST

- கவிஞர் க.முருகேஸ்வரி 


நிலவு தூங்கிப் போனது...

ஆம்

நிலவும் தூங்கிப் போனது....


என் நினைவு மட்டும்...

உன்னையே நினைத்து ஏங்கிக் கொண்டே இருக்கிறது!!


உன்னை எவ்வாறு அனுபவித்து 

வர்ணிப்பது 




உன்னை எவ்வாறு ஆக்ரமித்து ஆட்கொள்வது


எங்கே தொடங்கி...

எவ்வாறு முடிப்பது...


உன்னை எவ்வாறு புகழ்ந்து பாடுவது


உன்னை எவ்வாறு வடிவாய்‌‌ வடிப்பது


வடித்த பின் எவ்வாறு அணு அணுவாய் ரசித்து படிப்பது..


ஆம்...கவிதையே....

சீக்கிரம் வந்துவிடு...


உன்னை வடித்து படித்து விட்டு 


நிலவோடும்

உன் நினைவோடும்

நான் உறங்கச் செல்ல வேண்டும்...


இப்படிக்கு

கண் விழித்து கவிதை புனைவோர் சங்கம்


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக் கூடாது.. மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்

news

மேகதாது அணை விவகாரம்... ஜூலை 23 டெல்லியில் ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

news

தவெக.,விற்கு எதிரான குதிரை பேர வழக்கு தள்ளுபடி...உச்ச நீதிமன்றம் அதிரடி

news

தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை: 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

news

ஆஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கான விசா கட்டணம் அதிரடி உயர்வு!

news

சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது ஏன்?...இபிஎஸ் சரமாரி கேள்வி

news

'தடை நியாயமானதே..' டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தடையை நீக்க மறுப்பு!

news

ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து

news

முதல் முறை வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு இபிஎஃப் ரூ.15,000 ஊக்கத்தொகை

அதிகம் பார்க்கும் செய்திகள்