- கவிஞர் க.முருகேஸ்வரி
நிலவு தூங்கிப் போனது...
ஆம்
நிலவும் தூங்கிப் போனது....
என் நினைவு மட்டும்...
உன்னையே நினைத்து ஏங்கிக் கொண்டே இருக்கிறது!!
உன்னை எவ்வாறு அனுபவித்து
வர்ணிப்பது
உன்னை எவ்வாறு ஆக்ரமித்து ஆட்கொள்வது
எங்கே தொடங்கி...
எவ்வாறு முடிப்பது...
உன்னை எவ்வாறு புகழ்ந்து பாடுவது
உன்னை எவ்வாறு வடிவாய் வடிப்பது
வடித்த பின் எவ்வாறு அணு அணுவாய் ரசித்து படிப்பது..
ஆம்...கவிதையே....
சீக்கிரம் வந்துவிடு...
உன்னை வடித்து படித்து விட்டு
நிலவோடும்
உன் நினைவோடும்
நான் உறங்கச் செல்ல வேண்டும்...
இப்படிக்கு
கண் விழித்து கவிதை புனைவோர் சங்கம்
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
அமைச்சர் உறுதிமொழியை ஏற்று.. இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
யாரையும் ஜெயிக்க வைக்க நான் வரலை.. நான் ஜெயிக்க வந்திருக்கேன்.. விஜய் அதிரடி
ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு தான் காரணம்: அண்ணாமலை
கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேட்டி
வெள்ளி விலை ஒரே நாளில் இருமுறை வீழ்ச்சி: என்ன நடந்தது?
தங்கம் விலை நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்றும் குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?
பாமக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்...கட்சிப் பிளவுக்கு மத்தியில் ராமதாஸ் அதிரடி
கர்நாடகாவின் பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர் சி.ஜே. ராய் எடுத்த விபரீத முடிவு!
மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எவற்றில் விலை அதிகரிக்கும்?
{{comments.comment}}