Tiger Deaths: 2 புலிகளுக்கு விஷம்.. 8 புலிகள் பட்டினி, சண்டையால் மரணம்..!

Oct 08, 2023,10:45 AM IST

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் 10 புலிகள் சமீபத்தில் அடுத்தடுத்து மரணமடைந்தது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம்.


அதில் 2 புலிகள் மட்டும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாகவும், பிற புலிகள் பசி பட்டினி மற்றும் அவர்களுக்குள் நடந்த சண்டையில் உயிரிழந்ததாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும் இதற்கு ஒரு காரணம் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.


குறிப்பாக முதுமலை, சத்தியமங்கலம் வனப் பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அதேசமயம், இப்பகுதியில் அதிக அளவிலான மனித இடையூறுகளும் இருப்பதால் புலிகளின் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுகிறது.




கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 19ம் தேதி வரையிலான காலகட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகப் பகுதிக்குட்பட்ட 2 இடங்களிலும், நீலகிரி வனக் கோட்டத்துக்குட்பட்ட 3 இடங்களிலும்  6 குட்டிகள் உள்பட 10 புலிகள் அடுத்தடுத்து இறந்து கிடந்தன.


இதுகுறித்து கே.ரமேஷ் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர்.  இந்தக் குழு நடத்திய விசாரணை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:


இந்தியாவில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 30 சதவீத  புலிகள் நாகர்ஹோலே, பந்திப்பூர், வயநாடு, முதுமலை, சத்தியமங்கலம் ஆகிய வனப் பகுதியில் வசிக்கின்றன. இங்கு 2010ம் ஆண்டு மொத்தம் 382 புலிகளே இருந்தன. இது 2022ம் ஆண்டு 828 ஆக அதிகரித்துள்ளது.


முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் அதிக அளவிலான புலிகள் வசிக்கின்றன. இங்கு கடந்த பத்து ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. முதுமலையில் முன்பு 51 புலிகளே இருந்தன. தற்போது 114 புலிகள் உள்ளன. இங்கு புலிகள் அதிக அளவில் பெருகி விட்டதால் புலிகள் புழக்கம் குறைவாக உள்ள பகுதிகளுக்கு இங்கிருந்து புலிகள் செல்வதும் அதிகரித்தது. அதாவது நீலகிரி வனக் கோட்டப் பகுதியில் புலிகள் குறைவாக இருக்கும். அந்தப் பகுதிகளுக்கு புலிகள் இடம் பெயர்வது நடந்தது.  


புலிகள் நடமாடும் பகுதிகளில் தற்போது மனித இடையூறுகளும் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக அந்தப் பகுதியை விட்டு புலிகள் அகலும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அப்படித்தான் சேகூர் பகுதியில் 2 குட்டிகளை விட்டு விட்டு ஒரு தாய்ப்புலி வேறு பகுதிக்குப் போய் விட்டதால், அந்த 2 குட்டிகளும் சாப்பாடு கிடைக்காமல் பட்டினியில் உயிர் விட்டுள்ளன.


சின்ன குன்னூர் பகுதியில், இதே காரணத்தால்தான் தாய் அருகில் இல்லாததால் 4 குட்டிகள் உடல் நலிவடைந்து, பட்டினியால் உயிரிழந்துள்ளன. இந்த ஆறு குட்டிகளின் தாய் குறித்த  தகவல் இல்லை.  அந்த தாய் புலிகளை அடையாளம் காண முயற்சித்து வருகிறோம். டிஎன்ஏ சோதனை மற்றும் சிசிடிவி கேமரா மூலம் இதைக் கண்டறிய முயற்சித்து வருகிறோம்.


நடுவட்டம் மற்றும் கார்குடி பகுதிகளில் இரண்டு பெரிய புலிகள் இறந்து கிடந்ததற்குக் காரணம், புலிகளுக்குள் நடந்த சண்டையே.  எமரால்டு பகுதியில் இரண்டு புலிகள் கொல்லப்பட்டுள்ளன. அதாவது விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளன. இங்கு வேட்டைக்காரர்கள் அதிக அளவில் ஊடுறுவுவதாக நீண்ட காலமாகவே புகார்கள் உள்ளன. குறிப்பாக வட மாநிலங்களைச் சேர்ந்த வேட்டைக்காரர்கள் இங்கு ஊடுறுவித் தங்கி புலிகளை வேட்டையாடி வருவதாக ஒரு தகவல் உள்ளது. அதுகுறித்து விரிவாக ஆராயப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!

news

உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?

news

Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி

news

சந்தோஷம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்