Tiger Deaths: 2 புலிகளுக்கு விஷம்.. 8 புலிகள் பட்டினி, சண்டையால் மரணம்..!

Oct 08, 2023,10:45 AM IST

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் 10 புலிகள் சமீபத்தில் அடுத்தடுத்து மரணமடைந்தது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம்.


அதில் 2 புலிகள் மட்டும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாகவும், பிற புலிகள் பசி பட்டினி மற்றும் அவர்களுக்குள் நடந்த சண்டையில் உயிரிழந்ததாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும் இதற்கு ஒரு காரணம் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.


குறிப்பாக முதுமலை, சத்தியமங்கலம் வனப் பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அதேசமயம், இப்பகுதியில் அதிக அளவிலான மனித இடையூறுகளும் இருப்பதால் புலிகளின் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுகிறது.




கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 19ம் தேதி வரையிலான காலகட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகப் பகுதிக்குட்பட்ட 2 இடங்களிலும், நீலகிரி வனக் கோட்டத்துக்குட்பட்ட 3 இடங்களிலும்  6 குட்டிகள் உள்பட 10 புலிகள் அடுத்தடுத்து இறந்து கிடந்தன.


இதுகுறித்து கே.ரமேஷ் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர்.  இந்தக் குழு நடத்திய விசாரணை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:


இந்தியாவில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 30 சதவீத  புலிகள் நாகர்ஹோலே, பந்திப்பூர், வயநாடு, முதுமலை, சத்தியமங்கலம் ஆகிய வனப் பகுதியில் வசிக்கின்றன. இங்கு 2010ம் ஆண்டு மொத்தம் 382 புலிகளே இருந்தன. இது 2022ம் ஆண்டு 828 ஆக அதிகரித்துள்ளது.


முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் அதிக அளவிலான புலிகள் வசிக்கின்றன. இங்கு கடந்த பத்து ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. முதுமலையில் முன்பு 51 புலிகளே இருந்தன. தற்போது 114 புலிகள் உள்ளன. இங்கு புலிகள் அதிக அளவில் பெருகி விட்டதால் புலிகள் புழக்கம் குறைவாக உள்ள பகுதிகளுக்கு இங்கிருந்து புலிகள் செல்வதும் அதிகரித்தது. அதாவது நீலகிரி வனக் கோட்டப் பகுதியில் புலிகள் குறைவாக இருக்கும். அந்தப் பகுதிகளுக்கு புலிகள் இடம் பெயர்வது நடந்தது.  


புலிகள் நடமாடும் பகுதிகளில் தற்போது மனித இடையூறுகளும் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக அந்தப் பகுதியை விட்டு புலிகள் அகலும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அப்படித்தான் சேகூர் பகுதியில் 2 குட்டிகளை விட்டு விட்டு ஒரு தாய்ப்புலி வேறு பகுதிக்குப் போய் விட்டதால், அந்த 2 குட்டிகளும் சாப்பாடு கிடைக்காமல் பட்டினியில் உயிர் விட்டுள்ளன.


சின்ன குன்னூர் பகுதியில், இதே காரணத்தால்தான் தாய் அருகில் இல்லாததால் 4 குட்டிகள் உடல் நலிவடைந்து, பட்டினியால் உயிரிழந்துள்ளன. இந்த ஆறு குட்டிகளின் தாய் குறித்த  தகவல் இல்லை.  அந்த தாய் புலிகளை அடையாளம் காண முயற்சித்து வருகிறோம். டிஎன்ஏ சோதனை மற்றும் சிசிடிவி கேமரா மூலம் இதைக் கண்டறிய முயற்சித்து வருகிறோம்.


நடுவட்டம் மற்றும் கார்குடி பகுதிகளில் இரண்டு பெரிய புலிகள் இறந்து கிடந்ததற்குக் காரணம், புலிகளுக்குள் நடந்த சண்டையே.  எமரால்டு பகுதியில் இரண்டு புலிகள் கொல்லப்பட்டுள்ளன. அதாவது விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளன. இங்கு வேட்டைக்காரர்கள் அதிக அளவில் ஊடுறுவுவதாக நீண்ட காலமாகவே புகார்கள் உள்ளன. குறிப்பாக வட மாநிலங்களைச் சேர்ந்த வேட்டைக்காரர்கள் இங்கு ஊடுறுவித் தங்கி புலிகளை வேட்டையாடி வருவதாக ஒரு தகவல் உள்ளது. அதுகுறித்து விரிவாக ஆராயப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்