பாரீஸ்: பாரீஸில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு மத்தியில் அங்கு இந்தியா ஹவுஸ் திறக்கப்பட்டுள்ளது. அப்போது இந்தியாவில் 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த முயற்சித்து வருகிறோம் என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் உறுப்பினரும், ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியின் மனைவியுமான நீதா அம்பானி கூறியுள்ளார். இதனால் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா என்ற சுவாரஸ்யமான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியாவில் காமென்வெல்த் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுள்ன. அதேபோல கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர்களும் நடைபெற்றுள்ளன. ஆனால் உலகக் கோப்பைக் கால்பந்து மற்றும் ஒலிம்பிக் போட்டிகள்தான் இன்னும் கனவாகவே உள்ளன. இந்த இரு சர்வதேச போட்டிகளும் இதுவரை இந்தியா பக்கமே வந்ததில்லை.
இந்தியாவில் கால்பந்துப் போட்டிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளன. ஆனாலும் கூட உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலைதான் இன்னும் உள்ளது. அதேபோல ஒலிம்பிக் போட்டியும் இதுவரை இந்தியாவில் நடைபெற முடியாமல் உள்ளது.
இந்த நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் கிராமத்தில், இந்தியா ஹவுஸ் தொடங்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவன உதவியுடன் இது தொடங்கப்பட்டுள்ளது. இதை நீதா அம்பானி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷா, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அப்போது நீதா அம்பானி கூறுகையில், 2036ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒலிம்பிக்ஸை நடத்த தீவிரமாக முயற்சித்து வருகிறோம். ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா ஹவுஸ் திறக்கப்பட்டுள்ளது.
இந்தியா ஹவுஸில் இந்தியாவின் கலை, கலாச்சாரம், பாரம்பரியம், இசை, நடனம், இந்திய உணவுகள், பாலிவுட் இசை, தொழில்நுட்பம் என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கம். சர்வதேச நாடுகளின் வீரர், வீராங்கனைகளின் இந்தியாவின் செழுமையான பாரம்பரியத்தை அறிய இது உதவும் என்றார் நீதா அம்பானி.
இந்தியாவில் நடந்த முதல் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரை ரிலையன்ஸ் நிறுவனம்தான் ஸ்பான்சர் செய்து நடத்தியது. முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானிதான் அதை நடத்தி சர்வதேச நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் என்பது நினைவிருக்கலாம். அதன் பின்னர்தான் இந்தியாவிலும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடியும் என்று சர்வதேச நாடுகள் கருதின. இதையடுத்துதான் பல்வேறு சர்வதேச போட்டிகள் இந்தியாவை நோக்கி வந்தன என்பதும் முக்கியமானது.
நீதா அம்பானி வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்.
பாமகவில் எனக்கே அதிகாரம்.... என்னை சந்தித்த நிர்வாகிகளே தேர்தலில் போட்டியிடுவார்கள்: டாக்டர் ராமதாஸ்
தொடர் கனமழை... வயநாடு முண்டக்கையில் மீண்டும் நிலச்சரிவு!
விஜய்யின் அரசியல் சூறாவளி சுற்றுப்பயணம்...ஆகஸ்ட் 15ல் துவக்கம்?
ஆனி மாத ஆசாட அமாவாசை.. மிகச் சிறப்பானது.. மிகவும் முக்கியமானதும் கூட!
மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து விமர்சனம்.. ஆ ராசாவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
ரயில் கட்டண உயர்வு செய்தி.. மக்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
Axiom4: விண்வெளியில் புது வரலாறு எழுதும் இந்தியா.. ISS நிலையத்திற்குப் பயணமானார் சுபான்ஷு சுக்லா
மூன்றாவது நாளாக இன்றும் குறைந்தது தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
மாநாடு நகரமாகிறது மதுரை.. முருகனைத் தொடர்ந்து ஆடு மாடுகளுக்காக ஒரு மாநாடு!
{{comments.comment}}