சீன அதிபர் ஜின் பிங்குக்கு வாழ்த்து சொன்ன கைலாசா.. நித்தியானந்தா வேற லெவல்!

Mar 11, 2023,12:47 PM IST
சென்னை: எங்கிருக்கிறார்.. என்ன பண்ணுகிறார் என்றெல்லாம் தெரியாது.. ஆனால் என்னவெல்லாமோ பண்ணி தன்னை அடிக்கடி பேச வைத்து விடுகிறார் நித்தியானந்தா. இதோ இப்போது சீன அதிபராக மீண்டும் தேர்வாகியுள்ள ஜின் பிங்குக்கு வாழ்த்து கூறி அசர வைத்துள்ளார் நித்தியானந்தா.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் சாமியார் நித்தியானந்தா. கர்நாடகாவில் இவருக்கு ஆசிரமம் உள்ளது. இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு புகார்களில் சிக்கினார் நித்தியானந்தா. அவர் மீது கர்நாடக போலீஸ் வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து தலைமறைவானார் நித்தியானந்தா. அவரை தனிப்படை போலீஸார் கைது செய்து கர்நாடகம் கொண்டு வந்தனர்.

பின்னர் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தார் நித்தியானந்தா. வந்தவர் மீண்டும் சர்ச்சைகளில் சிக்கினார். மதுரை ஆதீனத்தை கைப்பற்ற முயற்சிப்பதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த நிலையில் திடீரென நித்தியானந்தா தலைமறைவாகி விட்டார். கொரோனா அலை பரவலுக்கு முன்பே அவர் தலைமறைவாகி விட்டார்.



அந்த சமயத்தில்தான் அவர் கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக ஒரு புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமீப காலமாக கைலாசா சார்பாக பல்வேறு சமூக வலைதளப் பதிவுகள் வெளியாகி கலகலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. பல்வேறு நாட்டுத் தலைவர்களைச் சந்திப்பது போலவும், ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்றது போலவும் அவர்கள் போட்டோ போட பரபரப்பு கூடியது. 

இந்த நிலையில் தற்போது சீன அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜின்பிங்குக்கு வாழ்த்து கூறியுள்ளார் நித்தியானந்தா. இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில்,  ஐக்கிய தேச கைலாசா சார்பிலும், இந்து மதத்தின் தலைமை பீடாதிபதி நித்தியானந்தா பரமசிவம் சார்பிலும், சீனக் குடியரசின் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜி ஜின்பிங்குக்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வெற்றிகரமான அதிபராக சிறப்பாக செயல்பட எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.  சீன நாட்டுக்கும், கைலாசாவுக்கும் இடையே நல்லுறவு தழைத்தோங்கவும் விரும்புகிறோம்.

சீன மக்களுக்கு பரமசிவத்தின் ஆசிர்வாதிங்கள் உண்டு. சீன மக்கள் மகிழ்ச்சியோடும், நலத்தோடும், வளத்தோடும், அமைதியோடும், பொருளாதார செழிப்போடும் வாழ வாழ்த்துகிறோம் என்று கூறியுள்ளார் நித்தியானந்தா.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்