உங்களுடன் ஸ்டாலின்.. முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை.. சி.வி. சண்முகத்திற்கும் Fine!

Aug 06, 2025,06:06 PM IST

டெல்லி : உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடையில்லை என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதோடு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது.


"உங்களுடன் ஸ்டாலின்" என்ற பெயரில் சமீபத்தில் தமிழக அரசு நலத்திட்டம் ஒன்றை துவங்கியது. இதையடுத்து இதை எதிர்த்து, அரசு பணத்தில் கட்சிக்கு விளம்பரம் தேடுகிறார்கள். அதனால் அரசு திட்டத்திற்கு முதல்வரின் பெயரை வைக்க தடை விதிக்க வேண்டும் என உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை எதிர்த்து முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம், சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். 


இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், அரசு திட்டங்களில் வாழும் அரசியல் தலைவரின் பெயரையோ, மறைந்த தலைவர்களின் புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டது. மேலும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கும் இடைக்கால தடை விதித்தது.




சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்திருந்தும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் அரசு விழாவாக நடத்தப்பட்டு, முதல்வரே துவக்கி வைத்துள்ளார். கோர்ட்டின் தடை உத்தரவை அமல்படுத்த தவறிய சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கும் சி.வி.சண்முகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சி.வி.சண்முகம் தரப்பு மனுவில் கேட்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு சென்னை ஐகோர்ட் விதித்த தடையை எதிர்த்து திமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடையில்லை. மனுதாரர் ஒரு குறிப்பிட்ட கட்சியை மட்டும் எதிர்த்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் என்பது தெரிகிறது. பொதுவாக அனைத்து கட்சிகளும் இது போல் பயன்படுத்தக் கூடாது என கேட்டிருக்கலாம். ஆனால் இது உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவாகும். உங்களின் அரசியல் சண்டைகளை கோர்ட்டிற்கு கொண்டு வராதீர்கள் என கண்டிப்புடன் தெரிவித்தது. 


மேலும் அரசியல் உள்நோக்கத்துடன் அரசின் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்