சென்னை: சென்னை மக்களே சென்னைக்கு அருகே இருக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட மக்களே.. உங்களுக்கெல்லாம் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை சூப்பரான மழை காத்திருக்காம். தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதோ கிட்ட வந்து விட்டது வட கிழக்குப் பருவ மழை. அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்காக மட்டுமே அனைவரும் வெயிட்டிங். மத்தபடி வெயிட்டாக வெளுத்து வாங்க ஆரம்பித்து விட்டது மழை. தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மழை ஜோராக தொடங்கி விட்டது.
இந்த சீசனின் முதல் பலத்த மழையை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் பெற்றுள்ளன. அங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் அளவுக்கு மழை பெய்துள்ளது.

வழக்கமாக வட கிழக்குப் பருவ மழைக்காலத்தில் ஏகப்பட்ட பஞ்சாயத்துக்களை சந்திப்பது நம்ம தலைநகரம் சென்னை தான். தண்ணீரில் மிதக்கும் சென்னை, வெள்ளத்தில் மூழ்கிய வேளச்சேரி, மிதக்கும் மடிப்பாக்கம் என்றெல்லாம் செய்திகளில் அடிபடுவது சென்னைக்கு சகஜமாகி விட்டது. இதனால் மழை வந்தாலே சென்னைக்கு என்னப்பா நிலவரம் என்று கலவரமாக கேட்பது வழக்கமாகி விட்டது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் காலையிலிருந்து லேசான வெயில் அடித்து வருகிறது. அதேசமயம், மாலை அல்லது இரவில் சூப்பரான மழை இருக்குமாம். இருப்பினும் சென்னை மற்றும் அதையொட்டியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 23ம் தேதி முதல் 30ம் தேதி காலக்கட்டத்தில்தான் நல்ல மழைப் பொழிவுக்கு வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அந்த சமயத்தில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு உருவாகவும் வாய்ப்பிருக்கலாம்.
இவர் சொல்வதைப் பார்த்தால் தீபாவளிக்கு சென்னைவாசிகள் சற்று நிம்மதியாக பட்டாசு வாங்கி வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.. இருந்தாலும் குடையோட கடைக்குப் போங்க.. அவ்வப்போது திடீர் திடீர் மழைக்கு வாய்ப்பிருக்காம்.
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}