எல்லாமே பக்காவா செட் ஆயிருச்சு.. வட கிழக்கு பருவ மழை இன்று அல்லது நாளை தொடங்கலாம்!

Oct 15, 2025,05:24 PM IST

சென்னை: வட கிழக்குப் பருவ மழை சிறப்பான தொடக்கத்துடன் ஆரம்பிக்கும் சூழல் அருமையாக உருவாகியிருக்கிறது. இன்று அல்லது நாளை பருவ மழை தொடங்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நேற்று முதலே சிறப்பான மழையை கடலோர தமிழ்நாடு பெற ஆரம்பித்திருக்கிறது. அதிலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் அனைத்து கடலோர மாவட்டங்களிலுமே பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. சென்னையில் இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. காலையிலும் கூட மழை தொடர்ந்தது.




வட சென்னையில் 100 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. அனைத்து கடலோர மாவட்டங்களிலும் நல்ல மழை காணப்படுவதால் வட கிழக்குப் பருவ  மழை இன்று அல்லது நாளை தொடங்கக் கூடும். இந்திய வானிலை மையம் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும்.


கடலோர மாவட்டங்களில் தற்போது மேகக் கூட்டம் கலைந்து காணப்படுவதால் மழை சற்று மட்டுப்படும் என்றும் உட்புற மாவட்டங்களில் மழை இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.


இன்று காலை 9.30 மணி நிலவரப்படி  கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன்... அன்புடன் வரவேற்ற எடப்பாடி பழனிச்சாமி

news

முழு மனதோடு என்டிஏ கூட்டணியில் இணைந்திருக்கிறேன்...தினகரன் அதிரடி

news

தேஜகூவைத் தேடி அடித்துப் பிடித்து ஓடி வரும் கட்சிகள்.. அடுத்து யாரு தேமுதிகவா?

news

பக்தர்களே தயராகுங்கள்! பழனி தைப்பூசத் திருவிழா ஜனவரி 26-ல் தொடக்கம்!

news

விஜய் பிரச்சாரத்தை எப்படி திட்டமிடலாம்.. தவெக தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று!

news

ஓபிஎஸ் அணி உடைந்தது.. ஒரத்தநாடு வைத்திலிங்கம்.. திமுகவில் இணைந்தார்!

news

வாங்க உங்களுக்குப் பிடித்தவர்களை அரவணைக்கலாம்.. இன்று தேசிய கட்டிப்பிடிப்பு தினம்!

news

ராக்கெட் வேகத்தில் உயர்ந்து தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பார்வதி தேவியின் அவதாரம்.. தேவாங்க குலத்தவரின் குல தெய்வம்.. ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்