எல்லாமே பக்காவா செட் ஆயிருச்சு.. வட கிழக்கு பருவ மழை இன்று அல்லது நாளை தொடங்கலாம்!

Oct 15, 2025,05:24 PM IST

சென்னை: வட கிழக்குப் பருவ மழை சிறப்பான தொடக்கத்துடன் ஆரம்பிக்கும் சூழல் அருமையாக உருவாகியிருக்கிறது. இன்று அல்லது நாளை பருவ மழை தொடங்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நேற்று முதலே சிறப்பான மழையை கடலோர தமிழ்நாடு பெற ஆரம்பித்திருக்கிறது. அதிலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் அனைத்து கடலோர மாவட்டங்களிலுமே பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. சென்னையில் இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. காலையிலும் கூட மழை தொடர்ந்தது.




வட சென்னையில் 100 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. அனைத்து கடலோர மாவட்டங்களிலும் நல்ல மழை காணப்படுவதால் வட கிழக்குப் பருவ  மழை இன்று அல்லது நாளை தொடங்கக் கூடும். இந்திய வானிலை மையம் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும்.


கடலோர மாவட்டங்களில் தற்போது மேகக் கூட்டம் கலைந்து காணப்படுவதால் மழை சற்று மட்டுப்படும் என்றும் உட்புற மாவட்டங்களில் மழை இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.


இன்று காலை 9.30 மணி நிலவரப்படி  கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தோல்விகள் பாடங்களைக் கற்பிக்கலாம்,.. ஆனால் வெற்றிகள் மட்டுமே வரலாற்றை எழுதும்!

news

India T20 World Cup Champion: அகமதாபாத்தில் புதிய வரலாறு.. 3வது டி 20 உலகக் கோப்பையை வென்றது இந்தியா

news

T20 Cricket World Cup Finals: அகமதாபாத்தை அதிர விட்ட இந்தியா.. அடுத்தடுத்து பல உலக சாதனைகள் காலி!

news

இந்திய பேட்டிங் வேகத்தை சீர்குலைத்த ஜிம்மி நீஷம்.. சுத்த மோசம்.. ஒரே ஓவரில் 3 விக்கெட்கள்!

news

ஹாட்ரிக் அரை சதம்.. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வித்தை காட்டிய சஞ்சு சாம்சன்!

news

பேச வேண்டிய நேரத்தில் பேட் பேசும்.. சுனில் கவாஸ்கரின் வாயை.. அதிரடியாக மூடிய அபிஷேக் சர்மா!

news

அபிஷேக் - சஞ்சு சாம்சன் அதிரிபுதிரி ஆட்டம்.. பாகிஸ்தான் உலக சாதனையை முறியடித்த இந்தியா!

news

வலிகள் பல தாங்கி வாழ்க்கை பயணத்தில்.... !

news

அரை சதம் போட்ட கையோடு அவுட்டானார் இஷான் கிஷன்.. இந்தியாவுக்கு 300 ரன்கள் வருமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்