சென்னை: வட கிழக்குப் பருவ மழை சிறப்பான தொடக்கத்துடன் ஆரம்பிக்கும் சூழல் அருமையாக உருவாகியிருக்கிறது. இன்று அல்லது நாளை பருவ மழை தொடங்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று முதலே சிறப்பான மழையை கடலோர தமிழ்நாடு பெற ஆரம்பித்திருக்கிறது. அதிலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் அனைத்து கடலோர மாவட்டங்களிலுமே பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. சென்னையில் இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. காலையிலும் கூட மழை தொடர்ந்தது.

வட சென்னையில் 100 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. அனைத்து கடலோர மாவட்டங்களிலும் நல்ல மழை காணப்படுவதால் வட கிழக்குப் பருவ மழை இன்று அல்லது நாளை தொடங்கக் கூடும். இந்திய வானிலை மையம் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும்.
கடலோர மாவட்டங்களில் தற்போது மேகக் கூட்டம் கலைந்து காணப்படுவதால் மழை சற்று மட்டுப்படும் என்றும் உட்புற மாவட்டங்களில் மழை இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இன்று காலை 9.30 மணி நிலவரப்படி கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}