சென்னை: வட கிழக்குப் பருவ மழை சிறப்பான தொடக்கத்துடன் ஆரம்பிக்கும் சூழல் அருமையாக உருவாகியிருக்கிறது. இன்று அல்லது நாளை பருவ மழை தொடங்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று முதலே சிறப்பான மழையை கடலோர தமிழ்நாடு பெற ஆரம்பித்திருக்கிறது. அதிலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் அனைத்து கடலோர மாவட்டங்களிலுமே பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. சென்னையில் இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. காலையிலும் கூட மழை தொடர்ந்தது.
வட சென்னையில் 100 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. அனைத்து கடலோர மாவட்டங்களிலும் நல்ல மழை காணப்படுவதால் வட கிழக்குப் பருவ மழை இன்று அல்லது நாளை தொடங்கக் கூடும். இந்திய வானிலை மையம் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும்.
கடலோர மாவட்டங்களில் தற்போது மேகக் கூட்டம் கலைந்து காணப்படுவதால் மழை சற்று மட்டுப்படும் என்றும் உட்புற மாவட்டங்களில் மழை இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இன்று காலை 9.30 மணி நிலவரப்படி கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
கரூர் துயர சம்பவம்...விஜய் தாமதமாக வந்ததே காரணம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம்!
நெருங்கும் தீபாவளி...தங்கம் வெள்ளி விலை எவ்வளவு உயர்வு தெரியுமா?
விண்வெளி நாயகா.. மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று!
மும்பை பங்குச் சந்தை.. உயர்வுடன் தொடங்கிய வர்த்தகம்.. அமெரிக்க பேச்சுவார்த்தை எதிரொலி
தமிழ்க் கலாச்சாரத்தைக் கேவலப்படுத்தும் பிக் பாஸ்.. தடை செய்யுங்கள்.. த.வா.க. வேல்முருகன் ஆவேசம்
பீகார் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்.. நிதீஷ் குமார் தோற்பார்.. பிரஷாந்த் கிஷோர்
எல்லாமே பக்காவா செட் ஆயிருச்சு.. வட கிழக்கு பருவ மழை இன்று அல்லது நாளை தொடங்கலாம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 15, 2025... இன்று மாற்றங்களை காண போகும் ராசிகள்
தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
{{comments.comment}}