புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று கன மழை கொட்டித் தீர்த்து விட்ட நிலையில் இந்த வட கிழக்குப் பருவ மழை சீசனிலேயே இன்றுதான் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் நேற்று முதலே மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கும், காரைக்காலில் பள்ளிகளுக்கும் விடுமுறை அரிவிக்கப்பட்டது.
வட கிழக்குப் பருவமழைக்காலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை புதுச்சேரியில் மழை பெய்துள்ளது. நேற்று காலை முதல் மிதமான முறையில் பெய்து வந்த மழை, இன்று காலை வேகம் பிடித்தது. தொடர் மழையால் புதுச்சேரி முழுவதும் பல இடங்களில் மழை நீர் தேங்கி வெள்ளம் போலக் காணப்பட்டது.

45 அடி சாலை, செல்லன் நகர், ரெயின்போ நகர், நடேசன் நகர், பாவாணன் நகர், இந்திரா காந்தி சதுக்கம் ஆகிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. அதேபோல ராஜீவ் காந்தி சதுக்கம், கருவடிக்குப்பம் ஆகிய பகுதிகளில் சில இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

கன மழை பெய்ததால் காலையில் அலுவலகம் சென்றோர் அவதிக்குள்ளானார்கள். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ரங்கசாமி அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார், பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டார்.
புதுச்சேரியில் இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 120 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த வட கிழக்குப் பருவ மழை சீசனில் ஒரே நாளில் இந்த அளவுக்கு புதுச்சேரியில் மழை பெய்தது இதுவே அதிகபட்சமாகும்.

தற்போது புதுச்சேரியில் மழை சற்று ஓய்ந்துள்ளது. மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் அதை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}