ஆஹா..  வட தமிழ்நாட்டுக்கு மழை வருதாம்ண்ணே.. சென்னைக்கும் "பார்ட்டி" உண்டாம்!

Sep 02, 2023,04:30 PM IST
சென்னை: வட தமிழ்நாட்டில் சூப்பரான மழை பெய்யக் காத்திருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

கேரளாவிலும், கேரளாவையொட்டியுள்ள தமிழ்நாட்டின் மலைப் பகுதிகளிலும் கன மழை பெ்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் போட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

கடந்த நான்கு நாட்களாக தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கன மழை பெய்துள்ளது. தெற்கு, மேற்கு மற்றும் உட்புற தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்துள்ளது.  இன்று முதல் சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழ்நாட்டில் மழை பெய்யத் தொடங்கும்.

அடுத்த 2 வாரங்களுக்கு பருவ மழை நல்ல உச்சத்தில் இருக்கும். நாளையும், நாளை மறுநாளும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சித்தூர், திருப்பதி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும். குறிப்பாக இரவு நேர மழை சிறப்பாக இருக்கும்.  சில இடங்களில் 100 மில்லி மீட்டர் அளவிலான மழை இருக்கக் கூடும்.

பிற மாவட்டங்களில்  குறிப்பாக மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், சேலம், வால்பாறை ஆகிய பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

ஆதலால் காதல் செய்வீர்!

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

அதிகம் பார்க்கும் செய்திகள்