ஆஹா..  வட தமிழ்நாட்டுக்கு மழை வருதாம்ண்ணே.. சென்னைக்கும் "பார்ட்டி" உண்டாம்!

Sep 02, 2023,04:30 PM IST
சென்னை: வட தமிழ்நாட்டில் சூப்பரான மழை பெய்யக் காத்திருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

கேரளாவிலும், கேரளாவையொட்டியுள்ள தமிழ்நாட்டின் மலைப் பகுதிகளிலும் கன மழை பெ்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் போட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

கடந்த நான்கு நாட்களாக தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கன மழை பெய்துள்ளது. தெற்கு, மேற்கு மற்றும் உட்புற தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்துள்ளது.  இன்று முதல் சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழ்நாட்டில் மழை பெய்யத் தொடங்கும்.

அடுத்த 2 வாரங்களுக்கு பருவ மழை நல்ல உச்சத்தில் இருக்கும். நாளையும், நாளை மறுநாளும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சித்தூர், திருப்பதி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும். குறிப்பாக இரவு நேர மழை சிறப்பாக இருக்கும்.  சில இடங்களில் 100 மில்லி மீட்டர் அளவிலான மழை இருக்கக் கூடும்.

பிற மாவட்டங்களில்  குறிப்பாக மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், சேலம், வால்பாறை ஆகிய பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?

news

TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?

news

விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்

news

குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்

news

அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?

news

கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க

news

தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு

news

ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்

news

மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்