சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை விலகி விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த வடகிழக்கு பருவமழை நாளுக்கு நாள் தீவிரமடைந்து தமிழகத்திற்கு நிறைய மழைகளை கொடுத்தது. கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் வட கிழக்குப் பருவ மழையால் அதீதமான மழையைப் பெற்றது இந்த சீசன்தான்.
வங்க கடலில் அடுத்தடுத்து உருவான காற்று சுழற்சி காரணமாக கடலோர பகுதிகளில் மட்டுமல்லாமல் தென் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது. அதாவது கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் டாணா, ரிமால், ஃபெங்கல் என மூன்று புயல்கள் உருவானது. இதில் வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் மட்டும் டானா மற்றும் ஃபெங்கல் புயல் உருவாகி இருந்தது. இதில் டானா புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த புயல் தமிழ்நாட்டை விட்டு விலகி ஓடிசா மற்றும் மேற்கு வங்காளம் இடையே கரையை கடந்தது.

ஆனால் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான ஃபெங்கல் புயல் தமிழ்நாட்டின் கடலோரம், வடக்கு உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக கனமழை முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்தது.
இதனால் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கும் அளவிற்கு மழை நீர் ஆற்று வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. மக்கள் செய்வதறியாமல் புலம்பி தவித்து வந்தனர். இதனை தொடர்ந்து இப்பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
விழுப்புரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் பெய்த வரலாறு காணாத மழையால் அப்பகுதிகள் முழுவதும் மழைநீரில் தத்தளித்தது. இதனால் முக்கிய ஆறுகளும் அணைகளும் நிரம்பி தண்ணீர் நகர் முழுவதும் ஆக்கிரமித்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்பட்டது. அதே சமயத்தில் விளை நிலங்கள் அனைத்தும் பாழாகின. அறுவடை செய்யும் நிலையிலுள்ள பயிர்கள் நீரில் மூழ்கி அழுகின.
திருவண்ணாமலையில் பெய்த கனமழையின் எதிரொலியால், நிலச்சரிவு ஏற்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த பெங்கல் புயலின் தாக்கம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் புதுச்சேரி காரைக்கால் கடலோரப் பகுதிகளில் உள்ள கிராமங்கள் முழுவதும் நீரில் மூழ்கி கடும் சேதத்தை சந்தித்தது. மக்கள் உடைமைகளை இழந்து தவிப்பிற்கு உள்ளாகினர்.
இந்த வட கிழக்கு பருவ மழைக்காலத்தில் அதிக அளவிலான பாதிப்பை சந்தித்தது பெங்கல் புயல் சமயத்தில்தான். நவம்பர் 22ஆம் தேதி உருவாகி, டிசம்பர் ஒன்றாம் தேதி வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இடையே கரையை கடந்தாலும் கூட தொடர்ந்து தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டே இருந்தது.
பின்னர் மழையின் தீவிரம் படிப்படியாக குறைந்து பனிப்பொழிவு தொடங்கியது. இருப்பினும் இலங்கை தெற்கே உருவான வளிமண்டல சுழற்சி காரணமாக ஜனவரி 11 பதினோராம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வந்தது. அதே சமயத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வந்தது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கி 100 நாட்கள் பெய்துள்ள நிலையில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் விலகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு இயல்பை விட 33 சதவிகிதம் அதிகமாக பெய்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
பருவ மழை விலகி விட்டாலும் கூட, 29.1.2025-ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
30.1.2025 கன மழை:
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மிதமான மழை:
தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளது.
31.1.2025 கனமழை:
கோவை, நீலகிரி, மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மிதமான மழை:
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}