ஸ்டாக்ஹோம்: நோபல் பரிசு அறிவிப்புக்கு முன் திடீரென அதிகரித்த சூதாட்ட நடவடிக்கை குறித்து நார்வே நோபல் நிறுவனம் விசாரணை நடத்துகிறது.
2025 ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு ஆதரவாக சூதாட்ட விகிதங்கள் திடீரென உயர்ந்தன. இது வெற்றியாளர் பற்றிய ரகசியத் தகவல் கசிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
Polymarket என்ற கிரிப்டோகரன்சி அடிப்படையிலான கணிப்புத் தளத்தில், மரியா கொரினா மச்சாடோவுக்கான சூதாட்ட விகிதங்கள் நான்கு சதவீதத்திற்கும் குறைவாக இருந்து திடீரென எழுபது சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தன. ஒரு புதிய கணக்கிலிருந்து செய்யப்பட்ட ஒரு பெரிய பந்தயம் சந்தையின் மனநிலையை மாற்றியதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சற்று முன்பு நடந்த இந்த திடீர் உயர்வு, நோபல் அமைப்புக்குள்ளிருந்து யாரேனும் தகவலைக் கசிய விட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. நோபல் குழுவின் தலைவர் ஜோர்கன் வாட்னே ஃப்ரைட்னெஸ், இந்த அசாதாரணமான நடவடிக்கையை ஒப்புக்கொண்டாலும், ரகசியத்தன்மையைப் பேணுவதில் குழு உறுதியாக இருப்பதாக வலியுறுத்தினார். வழக்கமான நடைமுறையின்படி, மச்சாடோ அறிவிப்புக்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் இது குறித்து தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Polymarket போன்ற தளங்கள், வழக்கமான சூதாட்ட தளங்களை விட நிதிப் பரிவர்த்தனை தளங்களைப் போல செயல்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். நோபல் நிறுவனத்திலிருந்து யாரேனும் தகவலை கசிய விட்டிருப்பது உண்மையாக இருந்தால், 123 ஆண்டு கால நோபல் அமைதிப் பரிசின் வரலாற்றில் மிக மோசமான சம்பவமாக இது அமையும்.
நோபல் நிறுவனம் தனது விசாரணையின் விவரங்களை வெளியிடவில்லை. விரைவில் இதுகுறித்த உண்மை தெரிய வரலாம் என்று தெரிகிறது.
ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?
கோவையில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்க என்ன நடவடிக்கை?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கும், நாளை 4 மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதமா? ஆளுநர் மாளிகை விளக்கம்
கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேட்டி!
பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டாமா?:எடப்பாடி பழனிச்சாமி
யாரும் செய்யாத பித்தலாட்டம்..திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி விட்டார்: வைகோ ஆவேசம்!
ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மோடியுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது.. இந்தியா வரப் போகிறேன்.. அதிபர் டிரம்ப் தகவல்
{{comments.comment}}