மதுரை: பிரபல தமிழ் எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் மதுரையில் இன்று காலமானார். அவருக்கு வயது 65.
மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று பாத்ரூமில் கால் வழுக்கி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார் இந்திரா செளந்தரராஜன் என்று தகவல்கள் கூறுகின்றன.
தமிழ் இலக்கிய உலகில் முக்கியமானவர் இந்திரா செளந்தரராஜன். சிறுகதைகள், தொடர் கதைகள், நாவல்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்களிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார் எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன்.

எங்கே என் கண்ணன், நாக பஞ்சமி, நீலக்கல் மோதிரம், கோட்டைப்புரத்து வீடு, காற்றாய் வருவேன், விடாது கருப்பு, ருத்ர வீணை, தேடாதே தொலைந்து போவாய் என இவரது சிறந்த கதைகளை மிகப் பெரிய பட்டியல் இடலாம். என் பெயர் ரங்கநாயகி, சிவமயம், ருத்ரவீணை, விடாது கருப்பு, மர்மதேசம் என இவரது படைப்புகள் பல தொலைக்காட்சித் தொடர்களாகவும் வெளியாகி புகழ் பெற்றுள்ளன.
பக்தி இலக்கியத்திற்கும் இந்திரா செளந்தரராஜன் மிக முக்கியப் பங்காற்றியுள்ளார். குறிப்பாக வைணவ மத நூல்களைப் படித்துத் தேறியவர். அதில் உள்ள பல்வேறு விஷயங்களை சாமானிய மக்களுக்கும் புரியும் வகையில் எழுதியவர் இந்திரா செளந்தரராஜன்.
இந்திரா செளந்தரராஜனின் மறைவுக்கு பல்வேறு எழுத்தாளர்கள், தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வானிலை கொடுத்த அப்டேட்.. இன்றும், நாளையும் எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும் தெரியுமா?
மதுரையின் வளர்ச்சிக்கு போடப்படும் தடைக்கற்களை தகர்த்தெரிவோம்:முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு!
அரசியல் கட்சிகளுக்கான SOP ரெடி.. உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது தமிழ்நாடு அரசு!
திமுக அரசு ₹4,000 கோடியில் ஊழல் செய்வதற்கு மட்டுமே, விதிகளை மீறி கால நீட்டிப்பு செய்கிறது: அண்ணாமலை
பாஜக அரசின் ஒரவஞ்சனப்போக்கை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்: செல்வப்பெருந்தகை!
17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகள்
மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகம் செய்கிறது திமுக அரசு –அன்புமணி ராமதாஸ் வேதனை
சமூக வலைதளங்களில் இளையராஜா படத்தை பயன்படுத்த தடை: சென்னை உயர்நீதி மன்றம்
மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை!
{{comments.comment}}