மதுரை: பிரபல தமிழ் எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் மதுரையில் இன்று காலமானார். அவருக்கு வயது 65.
மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று பாத்ரூமில் கால் வழுக்கி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார் இந்திரா செளந்தரராஜன் என்று தகவல்கள் கூறுகின்றன.
தமிழ் இலக்கிய உலகில் முக்கியமானவர் இந்திரா செளந்தரராஜன். சிறுகதைகள், தொடர் கதைகள், நாவல்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்களிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார் எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன்.

எங்கே என் கண்ணன், நாக பஞ்சமி, நீலக்கல் மோதிரம், கோட்டைப்புரத்து வீடு, காற்றாய் வருவேன், விடாது கருப்பு, ருத்ர வீணை, தேடாதே தொலைந்து போவாய் என இவரது சிறந்த கதைகளை மிகப் பெரிய பட்டியல் இடலாம். என் பெயர் ரங்கநாயகி, சிவமயம், ருத்ரவீணை, விடாது கருப்பு, மர்மதேசம் என இவரது படைப்புகள் பல தொலைக்காட்சித் தொடர்களாகவும் வெளியாகி புகழ் பெற்றுள்ளன.
பக்தி இலக்கியத்திற்கும் இந்திரா செளந்தரராஜன் மிக முக்கியப் பங்காற்றியுள்ளார். குறிப்பாக வைணவ மத நூல்களைப் படித்துத் தேறியவர். அதில் உள்ள பல்வேறு விஷயங்களை சாமானிய மக்களுக்கும் புரியும் வகையில் எழுதியவர் இந்திரா செளந்தரராஜன்.
இந்திரா செளந்தரராஜனின் மறைவுக்கு பல்வேறு எழுத்தாளர்கள், தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Women's Day: மகளிருக்கு வாக்குறுதிகள்.. நாளை மாமல்லபுரத்தில் அறிவிக்கிறார் விஜய்.. தவெக தகவல்
வாக்கு சதவீதத்தை காட்டி அழுத்தம் தர மாட்டோம்: நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்
கூட்டணி வெற்றிக்காக தியாகம் செய்ய காங்கிரஸ் தயார்: மாணிக்கம் தாகூர் பல்டி
ராஜ்யசபா தேர்தல் 2026.. திமுக, அதிமுக, காங்., பாமக, தேமுதிக வேட்பு மனுக்கள் ஏற்பு
ஓபிஎஸ் போடி தொகுதியில் போட்டி?...விருப்பமனு அளித்த மகன் ரவீந்திரநாத்
தமிழக கவர்னர் ஆர் .என். ரவியை அதிரடியாக மாற்றியதற்கு இது தான் காரணமா?
திமுக கூட்டணியில் கமல் கட்சிக்கு எத்தனை சீட்? வெளியான பரபரப்பு அப்டேட்
துபாயில் ஏவுகணை தாக்குதல் ...மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தல்
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் ரிசல்ட் ...இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்து மதுரை பெண் சாதனை
{{comments.comment}}