மதுரை: பிரபல தமிழ் எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் மதுரையில் இன்று காலமானார். அவருக்கு வயது 65.
மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று பாத்ரூமில் கால் வழுக்கி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார் இந்திரா செளந்தரராஜன் என்று தகவல்கள் கூறுகின்றன.
தமிழ் இலக்கிய உலகில் முக்கியமானவர் இந்திரா செளந்தரராஜன். சிறுகதைகள், தொடர் கதைகள், நாவல்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்களிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார் எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன்.

எங்கே என் கண்ணன், நாக பஞ்சமி, நீலக்கல் மோதிரம், கோட்டைப்புரத்து வீடு, காற்றாய் வருவேன், விடாது கருப்பு, ருத்ர வீணை, தேடாதே தொலைந்து போவாய் என இவரது சிறந்த கதைகளை மிகப் பெரிய பட்டியல் இடலாம். என் பெயர் ரங்கநாயகி, சிவமயம், ருத்ரவீணை, விடாது கருப்பு, மர்மதேசம் என இவரது படைப்புகள் பல தொலைக்காட்சித் தொடர்களாகவும் வெளியாகி புகழ் பெற்றுள்ளன.
பக்தி இலக்கியத்திற்கும் இந்திரா செளந்தரராஜன் மிக முக்கியப் பங்காற்றியுள்ளார். குறிப்பாக வைணவ மத நூல்களைப் படித்துத் தேறியவர். அதில் உள்ள பல்வேறு விஷயங்களை சாமானிய மக்களுக்கும் புரியும் வகையில் எழுதியவர் இந்திரா செளந்தரராஜன்.
இந்திரா செளந்தரராஜனின் மறைவுக்கு பல்வேறு எழுத்தாளர்கள், தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அதிமுக கூடாரத்தில் சலசலப்பு: தவெக-வில் இணையப்போகும் முக்கிய புள்ளிகள்? செங்கோட்டையன் சூசகம்!
தலைநகரில் கிறிஸ்து பிறப்பு விழா: டெல்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!
யோகிகளின் வாழ்க்கை தத்துவம் (Jesus Consciousness)
கற்க, விளையாட.. கனவு காணவும் உரிமை உண்டு.. Children’s Rights!
எம்மதமும் சம்மதம் என்று அனைவரும் வாழ முயற்சி செய்வோமா?
அவளுடைய கடிகாரம் நின்றபோது.. Paused!
தாய் எட்டடி பாய்ந்தால்; பிள்ளை பதினாரடி பாயுமாம்! (பழமொழியும் உண்மை பொருளும்)
வடதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருக்காம் மக்களே: வானிலை ஆய்வு மையம் தகவல்!
அதிமுக கூட்டணியில் அமமுக.,விற்கு 6 சீட்டா?...உண்மையை உடைத்த டிடிவி தினகரன்
{{comments.comment}}