பிரபல தமிழ் எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் .. மதுரையில் காலமானார்

Nov 10, 2024,04:47 PM IST

மதுரை: பிரபல தமிழ் எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் மதுரையில் இன்று காலமானார். அவருக்கு வயது 65.


மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று பாத்ரூமில் கால் வழுக்கி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார் இந்திரா செளந்தரராஜன் என்று தகவல்கள் கூறுகின்றன.


தமிழ் இலக்கிய உலகில் முக்கியமானவர் இந்திரா செளந்தரராஜன். சிறுகதைகள், தொடர் கதைகள், நாவல்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்களிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார் எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன்.




எங்கே என் கண்ணன், நாக பஞ்சமி,  நீலக்கல் மோதிரம், கோட்டைப்புரத்து வீடு, காற்றாய் வருவேன், விடாது கருப்பு, ருத்ர வீணை, தேடாதே தொலைந்து போவாய் என இவரது சிறந்த கதைகளை மிகப் பெரிய பட்டியல் இடலாம். என் பெயர் ரங்கநாயகி, சிவமயம், ருத்ரவீணை, விடாது கருப்பு, மர்மதேசம் என இவரது படைப்புகள் பல தொலைக்காட்சித்  தொடர்களாகவும் வெளியாகி புகழ் பெற்றுள்ளன.


பக்தி இலக்கியத்திற்கும் இந்திரா செளந்தரராஜன் மிக முக்கியப் பங்காற்றியுள்ளார்.  குறிப்பாக வைணவ மத நூல்களைப் படித்துத் தேறியவர். அதில் உள்ள பல்வேறு விஷயங்களை சாமானிய மக்களுக்கும் புரியும் வகையில் எழுதியவர் இந்திரா செளந்தரராஜன்.


இந்திரா செளந்தரராஜனின் மறைவுக்கு பல்வேறு எழுத்தாளர்கள், தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!

news

Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

news

என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!

news

அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!

news

கண்ணும் கண்ணும் நோக்கினால்!

news

அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?

news

ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)

அதிகம் பார்க்கும் செய்திகள்