"நேற்று கேங்ஸ்டர்.. இன்று பாஜக".. அதிர வைக்கும் நெடுங்குன்றம் சூர்யா!

Sep 28, 2023,06:57 PM IST
சென்னை: "தென் சென்னையின் ராஜா.. செங்கல்பட்டு வாத்தியார்.. சிங்கம்" என்று தனது ஆதரவாளர்களால் புகழப்படும் "கேங்ஸ்டர்"  நெடுங்குன்றம் சூர்யா, பாஜகவில் இணைந்து சூட்டோடு சூடாக பதவியையும் பெற்று அவரைப் போன்ற ரவுடிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

"அயோக்கியர்களின் கடைசிப்  புகலிடம் அரசியல்" என்று ஒரு பதம் நீண்ட காலமாகவே உள்ளது.  அது அடிக்கடி உண்மை என்று நிரூபிக்கப்படும். ரவுடியாக, சமூக விரோதியாக வலம் வரும் பலர் பின்னர் ஏதாவது கட்சியில் சேருவார்கள்.. அல்லது அவர்களே கட்சி ஆரம்பிப்பார்கள்.. கூடவே ஜாதியையும் துணைக்கு வைத்துக் கொள்வார்கள். இது உ.பி. முதல் தமிழ்நாடு வரை எல்லா மாநிலங்களிலுமே நீக்கமற நிறைந்திருப்பதுதான். இதில் ஆச்சரியமே கிடையாது.



ஆனால் சமீப காலமாக தமிழ்நாடு பாஜகவில்  ஏகப்பட்ட ரவுடிகள், மாஜி ரவுடிகள், குற்றப் பின்னணி கொண்டவர்கள் சேருவது தொடர் கதையாக உள்ளது. பலருக்குப் பதவியும் கொடுத்து பாஜக தலைமை அழகும் பார்த்துள்ளது.

அந்த வரிசையில் தற்போது நெடுங்குன்றம் சூர்யா இணைந்துள்ளார். இவர் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே உள்ள நெடுங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர். ஏ கிளாஸ் ரவுடியாக போலீஸாரால் பட்டியலில் சேர்க்கப்பட்டவர். கொலை, கட்டப் பஞ்சாயத்து,  அடிதடி  என இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 200க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி. இவர் நெடுங்குன்றம் ஊராட்சி வார்டு கவுன்சிலராக இருக்கிறார். சுயேச்சையாக போட்டியிட்டு வென்று பின்னர் பாஜகவில் இணைந்தவர். ஊராட்சி துணைத் தலைவியாக இருக்கிறார், செங்கல்பட்டு மாவட்ட மகளிர் அணித் தலைவியாகவும் இருக்கிறார். தனது மனைவியோடு சேர்ந்து தற்போது சூர்யாவும் பாஜகவில் இணைந்துள்ளார். நேற்றுதான் கட்சியில் சேர்ந்தார். சேர்ந்த உடனேயே அவருக்கு மாநில பட்டியல் அணி செயலாளர் பதவியைக் கொடுத்துள்ளது மாநிலத் தலைமை.



இதையடுத்து இன்று செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக தலைவர் வேத சுப்ரமணியத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் சூர்யா. அப்போது அவரது மனைவியும் உடன் இருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், என் மீது வழக்குகள் இருப்பது உண்மைதான். ஆனால் தற்போது எந்த பிடியாணையும் எனக்கு எதிராக இல்லை. தற்போது நான் எந்தவிதமான சட்டவிரோதமான காரியங்களிலும் ஈடுபடுவதில்லை. சமூகத்திற்கு தொண்டாற்ற வேண்டும் என்பதால்தான் பாஜகவில் இணைந்துள்ளேன்.

எனக்கு பிரதமர் நரேந்திர மோடி, மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் பிடிக்கும். எனவேதான் எனது மனைவியைப் போலவே நானும் பாஜகவில் இணைந்தேன். எனது பெயரை யாராவது தவறாகப் பயன்படுத்தி மிரட்டினால் தாராளமாக போலீஸில் புகார் கொடுக்கலாம். பாஜகவுக்காக ஒரு எறும்பு போல நான் செயல்படவுள்ளேன் என்றார் சூர்யா.

சமீபத்திய செய்திகள்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!

news

கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

news

கூலி டிரெய்லர்.. ஆகஸ்ட் 2ல் ரிலீஸ்.. லோகேஷ் கனகராஜ் செம தகவல்.. கைதி 2 எப்போ தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்