மனிதர்களை மட்டுமல்லாமல்.. ஆடு மாடுகளையும் கடிக்கும் வெறிநாய்கள்.. சீமான் முக்கிய கோரிக்கை!

Feb 19, 2025,06:26 PM IST

சென்னை: திருப்பூர் மாவட்டத்தில் கால்நடைகளை தாக்கி கொல்கின்ற வெறிநாய்களை விரைந்து அப்புறப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

சமீப காலமாகவே தெருக்களில் மாடுகள் நடமாட்டம் அதிகரித்து விட்டது. அதேபோல நாய்களின் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் நடந்து செல்ல முடியாமலும் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமலும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கால்நடைகளின் உரிமையாளர்கள் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடுவதால்  பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. சாலைகளில் கால்நடைகள் உலா வருவதாலும் குறுக்கே வருவதாலும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.


இதில் நாய்த் தொல்லைதான் கொடுமையாக உள்ளது. தெருவுக்கு பத்து நாய்கள் குறையாமல் உள்ளன. அந்த நாய்கள் சண்டை போட்டுக்கொண்டு வாகனங்களில் செல்பவர்களை துரத்துவது, நடந்து செல்லும் பொது மக்களை அச்சுறுத்துவது, என பல்வேறு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக சாலையில் செல்லும் வெறி நாய்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். வெறி நாய்கள் சாலையில் நடந்து செல்பவர்களை விடாமல் துரத்தி கடித்து குதறும் சம்பவமும் நிறைய நடக்கிறது. 




அப்படித்தான் சென்னையில் கடந்த வருடம் சிறுமி ஒருவரை தெரு நாய் கடித்து குதறிய சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் தெருவில் உலா வரும் கால்நடைகளை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் சுற்றித் திரியும் வெறி நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை  விடுத்துள்ளார். 


இதுதொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கை: திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் சுற்றித்திரியும் வெறிநாய்கள் மனிதர்களையும், கால்நடைகளையும் தாக்குகின்ற கொடுந்துயர நிகழ்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


குறிப்பாக ஆடுகள் மற்றும் இளம் மாடு கன்றுகளைத் தாக்கி உயிரிழப்பினை ஏற்படுத்தி, ஏழை எளிய உழவர் பெருமக்களுக்குப் பெருத்த பொருளாதார நட்டத்தை ஏற்படுத்துகிறது. இதனால் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள கொங்குப் பகுதி மக்கள் மீள முடியாத பொருளாதார இழப்பிற்கு ஆளாகி, செய்வதறியாது தவித்து வருகின்றனர். காங்கேயம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுவெளியில் சுற்றுத்திரியும் வெறிநாய்களைக் கட்டுப்படுத்தக்கோரி மாவட்ட ஆட்சியர் உட்பட அரசு அதிகாரிகளிடம் வேளாண் மக்கள் பலமுறை புகாரளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது.


ஆகவே, திருப்பூர் மாவட்டத்தில்  கால்நடைகளைத் தாக்கி கொல்கின்ற வெறிநாய்களை மாவட்ட நிர்வாகம் விரைந்து அப்புறப்படுத்த வேண்டுமெனவும், வெறிநாய்களால் கால்நடைகளைப் பறிகொடுத்து பெரும் நட்டத்திற்கு ஆளான வேளாண் பெருங்குடி மக்களுக்கு உரிய இழப்பீட்டினை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஓய்வு பெற்ற எஸ்ஐ ஜாகிர் உசேன் கொலை வழக்கு.. யாரும் தப்ப முடியாது.. முதல்வர் மு க ஸ்டாலின்

news

வெயிலுக்கு ஒரு குட்டி பிரேக்.. தமிழ்நாட்டில் இன்று முதல் 25ஆம் தேதி வரை.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

Chennai corporation budget: ரூ.5,145.52 கோடி பட்ஜெட்.. மேயர் பிரியா வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

news

பொது இடங்களில் உள்ள திமுக கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்றுங்கள்.. அமைச்சர் துரைமுருகன் உத்தரவு

news

நண்பா நீ விளையாடு.. நான் அம்பயரிங் பண்றேன்.. IPL Umpire ஆன விராட் கோலியின் டீம் மேட்!

news

அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுங்க: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!

news

Chennai MTC.. ஏசி பஸ் உட்பட அனைத்து பேருந்துகளிலும்.. இனி ரூ.2000/- மாதாந்திர சலுகை பாஸ்!

news

தெரு நாய்களை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை .. மேயர் பிரியாவுக்கு கார்த்தி சிதம்பரம் கோரிக்கை

news

முடிந்தது 9 மாத தவிப்பு.. தரையிறங்கிய டிராகன்.. புன்னகையுடன் பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்