வளையங்குளம் துயர நிகழ்வு.. இதுதான் இந்தியாவே வியக்கும் திமுக அரசின் 4 ஆண்டு காலச் சாதனையா? : சீமான்

May 21, 2025,06:52 PM IST

சென்னை: அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள், வளையங்குளம் துயர நிகழ்விற்கு என்ன விளக்கமளிக்கப் போகிறார்? இதுதான் இந்தியாவே வியக்கும் திமுக அரசின் நான்காண்டு காலச் சாதனையா? என்று நாதக ஓருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.


இது குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், மதுரை வளையங்குளத்தில் மழை காரணமாக  வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய அம்மாபிள்ளை, வீரமணி, வெங்கட்டி ஆகிய மூவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், உரிய நேரத்தில்  மருத்துவம் அளிக்கப்படாத காரணத்தால் உயிரிழந்த பெருந்துயர நிகழ்வு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.


மதுரை வளையங்குளம் அரசு மருத்துவமனையில், உரிய நேரத்தில் மருத்துவர்  இல்லாத காரணத்தால் விபத்தில் சிக்கியவர்களுக்கு மருத்துவம் அளிக்க தாமதமான காரணத்தினாலேயே மூவரும் உயிரிழக்க நேரிட்டது என்று வேதனையுடன் குமுறும் உறவினர்களின் குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.




ஐம்பதாண்டுகள் திராவிட கட்சிகள் மாறிமாறி தமிழ்நாட்டை தொடர்ச்சியாக ஆண்டபிறகும் அரசு மருத்துவமனையில் உயிர்காக்கும் மருத்துவம் கூட உரிய நேரத்தில், உயர் தரத்தில்   கிடைக்கப்பெறாத இழிநிலையில் தமிழ் மக்களை வைத்திருப்பது ஏற்க முடியாத பெருங்கொடுமையாகும்.


சென்னை போரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லை என்று புகார் கூறிய சகோதரர் கஞ்சா கருப்பினை வெளிப்படையாக மிரட்டிய திமுக அரசின் மக்கள்  நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள், வளையங்குளம் துயர நிகழ்விற்கு என்ன விளக்கமளிக்கப் போகிறார்? இதுதான் இந்தியாவே வியக்கும் திமுக அரசின் நான்காண்டு காலச் சாதனையா? 


தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் போதிய அளவில் ஆசிரியர்கள் இல்லை, அரசு மருத்துமனையில் போதிய அளவில் மருத்துவர்கள் - செவிலியர்கள் இல்லை, அரசு அலுவலங்களில் போதிய அளவில் ஊழியர்கள் இல்லை எனும் நிலையில், திராவிட மாடல் ஆட்சியில் எல்லாருக்கும் எல்லாம் என்பது வெற்று விளம்பர முழக்கம் என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.


வளையங்குளம் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.


மக்கள் நல்வாழ்வுத்துறையின் மோசமான நிர்வாகச் செயல்பாட்டால் உயிரிழந்தவர்களின்  குடும்பத்திற்கு, தமிழ்நாடு அரசு தலா 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியும், அரசு வேலையும் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தீஞ்ச சக்தியிலிருந்து ஆட்களை இழுக்கும் நீங்க என்ன.. காஞ்சு போன சக்தியா? .. மு.க. ஸ்டாலின் தாக்கு

news

KG முதல் PG வரை இலவச கல்வி.. ஒடிசா அதிரடியை எல்லோரும் கடைப்பிடிக்கலாமே?

news

தவெக.,வை நோக்கி படையெடுக்கும் மாற்று கட்சியினர்... பலமா? பலவீனமா?

news

டீசல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

news

Vijay Birthday: முதல்வராக முதல் முறையாக.. 52வது பிறந்த நாளைக் கொண்டாடத் தயாராகும் விஜய்

news

அதிமுக தேர்தல் தோல்வி எதிரொலி: மாவட்ட வாரியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

news

பாஜவிலிருந்து விலகி தவெகவில் இணைகிறார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி

news

லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை வேட்டை எப்போது தொடங்குகிறது?

news

Seven Days, Twenty Kilometres.. மற்றும் மறக்க முடியாத சில நினைவுகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்