திருப்பூர்: விஜய்க்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதை பாராட்ட வேண்டும். மற்றவர்கள் அதைக் கூட செய்யவில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தவெக தலைவர் விஜய்யை உயர்வாக பேசியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழ்நாட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை. இருந்தாலும் மண்,மலை, மணல் எனை எல்லாத்தையும் வெட்டி எடுத்தால் இப்படித்தான் இயற்கை பேரிடர்கள் ஏற்படும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட விஜய் களத்தில் நிற்க முடியாது. ஏனென்றால் களத்தில் பிரச்சனை வரும். பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றால் அவரை பார்க்க பெரும் கூட்டம் திரண்டு பிரச்சினை ஏற்படும். பிறகு அந்தப் பிரச்சினையை சமாளிக்க வேண்டும். இப்படி நடந்தால் தேவையில்லாத விமர்சனங்கள் எழும்.
விஜய்க்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது அதை பாராட்ட வேண்டும்.மற்றவர்கள் அதைக் கூட செய்யவில்லை. பாவப்பட்ட மக்கள் கூட்டத்தில் நானும் ஒருவராய் அழுகலாம். தம்பி இப்ப பேசுறது முதிர்ச்சியாகவும் ரொம்ப நிதானமாக இருக்கிறது என பலரும் கூறுகிறார்கள். அதேபோல் இங்கு உள்ளவர்களையும் தம்பி எங்கு படித்ததோ அங்கு அனுப்பி விட்டால் நல்லா இருக்கும். தம்பி விஜய்க்கு தேடல் அவசியம். புதிதாக ஒன்றை கற்றுக்கொள்வோம் தெரிந்து கொள்வோம் என்பதை குறை சொல்ல முடியாது அவர் கட்சிக்கு வந்தது மிக்க மகிழ்ச்சி. ஆனால் உதயநிதி பிறந்தநாளை கொண்டாடி இருந்தார்களே அதை என்ன சொல்வது.
சமீபத்தில் ஐயா பொன்முடி உடைய பதவியை ஒரு நீதிமன்றம் பறிக்கும். மூன்று நான்கு மாதங்கள் பிறகு அதே வழக்கு ஒரே நாடு இன்னொரு நீதிமன்றத்திற்கு போன பிறகு அதெல்லாம் அவர் மந்திரியாய் இருக்கலாம் என கூறும். இதே மாதிரி ஒரே நாடும் சட்டமும் வழக்கமும் எங்கேயாவது இருப்பதை பார்த்திருக்கிறீர்களா. கீழமை நீதிமன்றம் குற்றம்னு சொல்லும். உயர் நீதிமன்றம் விடுதலைனு சொல்லும். அப்புறம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றீர்கள் என்றால் அது குற்றம் என சொல்லும். ஜெயலலிதா வழக்கில் என்ன நடந்தது என்று நீங்களே பார்த்தீர்கள். அது பெரியவங்க விளையாட்டு. நாங்க சின்ன பிள்ளைகள். வேடிக்கைதான் பார்க்க வேண்டும்.
மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்றால் நீங்கள் ஏன் அவர்களுக்கு வரி செலுத்துகிறீர்கள். மாநிலங்களின் வரிதான் மத்திய அரசுக்கு நிதியாக செல்கிறது. அதை தரமுடியாது என்று சொல்லவேண்டும் என கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
நாம் தமிழர் ஒரு கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே விஜயை தாக்கி தம்பி பாசம் வேறு அரசியல் வேறு என பலமுறை கடுமையாக தாக்கி பேசப்பட்ட நிலையில் இன்று விஜயின் உதவும் எண்ணத்தை பாராட்ட வேண்டும் என பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2024ம் ஆண்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது.. சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்!
சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு.. பரிசுத்தொகையை அள்ளிக் கொடுத்த.. பிசிசிஐ!
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு.. மழை பிளஸ் வெயில் இதுதான் நிலவரம்..!
டாஸ்மாக் விவகாரத்தில்.. அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தடை.. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு!
கொலை பட்டியல் தான் திமுகவின் சாதனை.. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கு!
15 சிலிண்டருக்கு மேல் பயன்படுத்த கட்டுப்பாடு விதித்த.. இந்திய எண்ணெய் நிறுவனம்..!
Govt jobs vacancy: போக்குவரத்து துறையில்.. 3,274 காலிப் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
நாதக... இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக... வீரப்பன் மகள் வித்யாராணி நியமனம்
மார்ச் 22.. மக்கள் நீதி மய்யம் .. கமல்ஹாசன் தலைமையில் செயற்குழு, நிர்வாகக் குழு கூட்டம்!
{{comments.comment}}