சென்னை: எம்.ஜி.ஆர் படங்களில் நடிப்பதை நிறுத்திய பிறகு, நானும் திரைப்படங்கள் பார்ப்பதை நிறுத்தி விட்டேன் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், இந்தியா ஒரு மதசார் பற்ற நாடு. ஜாதி வேறுபாடு அற்ற இந்தியாவில் தமிழகம் உள்ளது. இதில் யாரையும் பிரித்துப் பார்ப்பது என்பது முடியாது. அனைவரும் ஒன்றாய் பணியாற்றும் நிலையில் அனைவரும் ஒன்றாக வாழ்வதற்கு நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

2026 இல் மீண்டும் இந்த இயக்கத்தை நிறுவிய புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆசியுடனும், இதய தெய்வம் அம்மா அவர்களின் நினைவில், இரு மாபெரும் தலைவர்களுடன் ஆசியோடு அதிமுக 2026ல் அணையில் ஏறுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இன்று இருக்கின்ற மெஜாரிட்டியை வைத்துக்கொண்டு வாரிசு வாரிசு என்று கூறி வருகின்றேன்.
விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் திரைப்படங்கள் நடிப்பதை நிறுத்தியவுடன் நானும் திரைப்படங்களை பார்ப்பதில்லை. முழுமையாக நிறுத்திவிட்டேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்க சென்றிருக்கிறார். அவர் பெருவாரியான தொழில்களை ஈர்த்துக்கொண்டு வருவார் என வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026...வேட்புமனு தாக்கல் துவங்கியது...யாருக்கு வெற்றி?
இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!
தொடுதிரையில் தொலைந்த நட்பு!
காத்திருப்பும் அழகானதே!
பட்டுச் சட்டை போட்ட மச்சான்!
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
{{comments.comment}}