சென்னை: எம்.ஜி.ஆர் படங்களில் நடிப்பதை நிறுத்திய பிறகு, நானும் திரைப்படங்கள் பார்ப்பதை நிறுத்தி விட்டேன் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், இந்தியா ஒரு மதசார் பற்ற நாடு. ஜாதி வேறுபாடு அற்ற இந்தியாவில் தமிழகம் உள்ளது. இதில் யாரையும் பிரித்துப் பார்ப்பது என்பது முடியாது. அனைவரும் ஒன்றாய் பணியாற்றும் நிலையில் அனைவரும் ஒன்றாக வாழ்வதற்கு நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

2026 இல் மீண்டும் இந்த இயக்கத்தை நிறுவிய புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆசியுடனும், இதய தெய்வம் அம்மா அவர்களின் நினைவில், இரு மாபெரும் தலைவர்களுடன் ஆசியோடு அதிமுக 2026ல் அணையில் ஏறுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இன்று இருக்கின்ற மெஜாரிட்டியை வைத்துக்கொண்டு வாரிசு வாரிசு என்று கூறி வருகின்றேன்.
விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் திரைப்படங்கள் நடிப்பதை நிறுத்தியவுடன் நானும் திரைப்படங்களை பார்ப்பதில்லை. முழுமையாக நிறுத்திவிட்டேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்க சென்றிருக்கிறார். அவர் பெருவாரியான தொழில்களை ஈர்த்துக்கொண்டு வருவார் என வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு
ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்
ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
அதிமுக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக
விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதை நான் நம்பவில்லை: தமிழிசை செளந்தரராஜன்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தக வெளியீட்டிற்குத் தடை
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுக: அண்ணாமலை காட்டம்
தமிழகத்தில் ஆவில் பால் பச்சை பாக்கெட் விலை உயர்வா? ஆவின் நிர்வாகம் விளக்கம்
{{comments.comment}}