"முதல்ல  1 ரூபாய் போடுவோம்".. மகளிர் உரிமைத் தொகை திட்ட ஏற்பாடுகள் தடபுடல்!

Sep 13, 2023,02:37 PM IST
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் முதல் கட்டமாக அனைத்து பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கும் ரூ.  1 அனுப்பி சோதனை செய்யும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

மேலும் யாரெல்லாம் இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனரோ அவர்களுக்கெல்லாம் உங்களைத் தேர்வு செய்துள்ளோம் என்ற எஸ்எம்எஸ்ஸும் அனுப்பப்படுகிறது. அதேபோல நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் கூட அதற்கான காரணத்தை விளக்கி குறுஞ்செய்தியை அதிகாரிகள் அனுப்புகிறார்களாம்.



திமுக அரசின் மிகப் பெரிய திட்டம் எது என்றால் அது இதுதான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வர்ணித்துள்ள திட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத் தொகையாக வழங்கப்படவுள்ளது. மிகப் பெரிய திட்டமாக பார்க்கப்படும் இதில் எந்தவிதமான தவறும் நடந்து விடக் கூடாது என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மிக மிக கவனமாக இருக்கிறார்.

மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இதுவரை 1,06,50,000 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களது வங்கிக் கணக்குகளில் தற்போது ரூ. 1 வரவு வைக்கப்பட்டு வருகிறதாம். அதாவது போடும் பணம் சரியாக போகிறதா என்பதை உறுதி செய்வதற்காக ஆளுக்கு ஒரு ரூபாய் கணக்கில் போடப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அதுவும் பரிசோதிக்கப்படுகிறது.

திமுக அரசின் மாபெரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் 15ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்