7 மாத கருவை சுமந்து கொண்டு.. வாள் வீச்சில் கலக்கிய வீராங்கனை.. வியப்பில் ஆழ்ந்த பாரீஸ்!

Jul 31, 2024,07:55 PM IST

பாரீஸ்:   எகிப்து நாட்டைச் சேர்ந்த வாள் வீச்சு வீராங்கனை நடா ஹபீஸ் தனது வயிற்றில் 7 மாத கருவை சுமந்து கொண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளார்.


எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் நடா ஹபீஸ். இவர் சிறந்த வாள் வீச்சு வீராங்கனை. 2018 ஆம் ஆண்டு ஆப்பிரிக்கா மண்டல சாம்பியன்ஷிப்பில் ஒரு வெள்ளியும், 2014 மற்றும் 2019களில் இரண்டு வெண்கலத்தையும் வென்றவர். தற்போது பாரீஸில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் நடா ஹபீஸ் வாள்வீச்சில் பங்கேற்றார். இதில் தன்னுடைய முதல் போட்டியில் அமெரிக்க வீராங்கனை எலிசபெத்தை எதிர்த்து  15 க்கு 13 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். தொடர்ந்து  நடைபெற்ற அடுத்த சுற்று போட்டியில் தென்கொரியா வீராங்கனையான ஜியோன் ஹயோங்கியை எதிர்த்து போட்டியிட்டு 15 க்கு 7 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார். 




இந்த நிலையில் நடா ஹபீஸ் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார். அச்செய்தியை உலகமே திரும்பிப் பார்த்து பலரின் கவனத்தையும் ஈர்க்கப் பெற்றுள்ளது. அதனை  அனைவரும் பாராட்டி  வருகின்றனர். நடா ஹபீஸ் கூறுகையில், களத்தில் இருந்தது இரண்டு பேர் என்று நினைக்கிறீர்கள். ஆனால் இருந்தது மூன்று பேர். ஒன்று நான், ஒன்று என் எதிரணி வீராங்கனை. மற்றொன்று இந்த உலகத்தை இன்னும் காணாத என் குட்டிக் குழந்தை. நானும் என் குழந்தையும் பல சவால்களை சந்தித்து இந்த போட்டியில் பங்கேற்று இருக்கிறோம்.


உணர்வுபூர்வமாகவும் உடல் ரீதியாகவும் பல சவால்கள் நிறைந்த இந்தப்  போட்டியை நான் சந்தித்தேன் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இச்செய்தி சோசியல் மீடியா முழுவதும் பரவி பலரையும் திரும்பிப் பார்க்க வைத்து வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


பெண்கள் இயல்பிலேயே சக்தி வாய்ந்தவர்கள், எதையும் சாதிக்கும் திறமை படைத்தவர்கள். துணிந்தால் எதுவும் காலடியில் என்பதைத்தான் நடா ஹபீஸ் நிரூபித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

அதிகம் பார்க்கும் செய்திகள்