பாரீஸ்: எகிப்து நாட்டைச் சேர்ந்த வாள் வீச்சு வீராங்கனை நடா ஹபீஸ் தனது வயிற்றில் 7 மாத கருவை சுமந்து கொண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளார்.
எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் நடா ஹபீஸ். இவர் சிறந்த வாள் வீச்சு வீராங்கனை. 2018 ஆம் ஆண்டு ஆப்பிரிக்கா மண்டல சாம்பியன்ஷிப்பில் ஒரு வெள்ளியும், 2014 மற்றும் 2019களில் இரண்டு வெண்கலத்தையும் வென்றவர். தற்போது பாரீஸில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் நடா ஹபீஸ் வாள்வீச்சில் பங்கேற்றார். இதில் தன்னுடைய முதல் போட்டியில் அமெரிக்க வீராங்கனை எலிசபெத்தை எதிர்த்து 15 க்கு 13 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். தொடர்ந்து நடைபெற்ற அடுத்த சுற்று போட்டியில் தென்கொரியா வீராங்கனையான ஜியோன் ஹயோங்கியை எதிர்த்து போட்டியிட்டு 15 க்கு 7 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார்.

இந்த நிலையில் நடா ஹபீஸ் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார். அச்செய்தியை உலகமே திரும்பிப் பார்த்து பலரின் கவனத்தையும் ஈர்க்கப் பெற்றுள்ளது. அதனை அனைவரும் பாராட்டி வருகின்றனர். நடா ஹபீஸ் கூறுகையில், களத்தில் இருந்தது இரண்டு பேர் என்று நினைக்கிறீர்கள். ஆனால் இருந்தது மூன்று பேர். ஒன்று நான், ஒன்று என் எதிரணி வீராங்கனை. மற்றொன்று இந்த உலகத்தை இன்னும் காணாத என் குட்டிக் குழந்தை. நானும் என் குழந்தையும் பல சவால்களை சந்தித்து இந்த போட்டியில் பங்கேற்று இருக்கிறோம்.
உணர்வுபூர்வமாகவும் உடல் ரீதியாகவும் பல சவால்கள் நிறைந்த இந்தப் போட்டியை நான் சந்தித்தேன் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இச்செய்தி சோசியல் மீடியா முழுவதும் பரவி பலரையும் திரும்பிப் பார்க்க வைத்து வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பெண்கள் இயல்பிலேயே சக்தி வாய்ந்தவர்கள், எதையும் சாதிக்கும் திறமை படைத்தவர்கள். துணிந்தால் எதுவும் காலடியில் என்பதைத்தான் நடா ஹபீஸ் நிரூபித்துள்ளார்.
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}