புதுடெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கான ஒப்புதல் ஏற்கனவே பெறப்பட்ட நிலையில், இத்திட்டம் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள சட்ட மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதை அறிமுக நிலையிலேயே எதிர்க்கட்சிகள் ஒரே குரலில் எதிர்த்தன.
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை கடந்த ஆட்சியில் இருந்தே மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இத்திட்டம் குறித்து ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய கடந்த செப்டம்பர் மாதம் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த மத்திய குழு பல்வேறு அரசியல் கட்சிகள், முன்னாள் நீதிபதிகள், பொதுமக்கள் என பலரிடமும் கருத்து பெறப்பட்டு அதற்கான பரிந்துரை அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவிடம் சமர்ப்பித்தது.
அதன் பின்னர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு குடியரசுரத் தலைவர் இந்த அறிக்கையை அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 12ம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மசோதா வரும் டிசம்பர் 16ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்டது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளடக்கிய, இந்தியா கூட்டணி தலைவர்கள் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் தேர்தலுக்கான மசோதா இன்று பிற்பகல் 12 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. 129 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமாக இன்று தாக்கல் ஆனது. தேர்தல் செலவினங்களை குறைப்பதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைப்படுத்துவதாக கூறப்பட்டுள்ள வரும் நிலையில் இத்திட்டத்தை மத்திய சட்ட துறை அமைச்சர் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். இதை அறிமுக நிலையிலேயே எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிர்த்தன. தற்போது மசோதா மீதான விவாதம் நடந்து வருகிறது.
ஏற்கனவே அதானி விவகாரம் மணிப்பூர் கலவரம் உள்ளிட்டவைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் 10வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.. வழக்கம் போல மாணவியரே அதிகம் பாஸ்!
பொள்ளாச்சி வழக்கில்.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க.. முதல்வர் உத்தரவு..!
என் குழந்தைகள் என் உயிர்.. என்னிடமிருந்து பிரிக்க முயன்றார்கள்.. நடிகர் ரவி மோகன் பரபரப்பு அறிக்கை
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 52 சதவீதம் குற்றங்கள் அதிகரிப்பு..பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்ய வேண்டாம்...ஆப்பிள் சிஇஓ.,க்கு டிரம்ப் உத்தரவு
cyclone shakthi பெங்களூருக்கு ஆரஞ்சு அலர்ட்...புயல் காற்றுடன் மழை வெளுக்க போகுதாம்
இந்தியாவில் அமலுக்கு வந்தது.. பயோ மெட்ரிக் விவரங்கள் அடங்கிய இ-பாஸ்போர்ட்..!
தொழிற்சாலையில் டேங்க் வெடிப்பு.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்!
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின்.. kissa47 பாடல் நீக்கம்.. படக்குழு அறிவிப்பு!
{{comments.comment}}