தென்காசி: பழைய குற்றால அருவியில் திடீர் என வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். வெள்ளத்தில் சிக்கி 17 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் தமிழகத்தில் அதிகமாக இருந்தது. வெயிலின் உக்கிரத்தை தாங்க முடியாத நிலைக்கு மக்கள் வந்தனர். பல மாவட்டங்களில் வெயில் செஞ்சுரி அடித்தது மட்டும் அல்லாமல், அனல் காற்றும் வீசி மக்களை ஒரு வழிபடுத்தி விட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அக்னி நட்சத்திரம் வேறு ஆரம்பித்தது. இதனால் மக்கள் என்ன செய்வது என்றே தெரியாத நிலைக்கு வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோடை மழை ஆங்காங்கே பெய்து மக்களை மகிழ்வித்தது. தமிழகத்தில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. இதனால், கோடை காலத்திலும் குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தால், சுற்றுலா பயணிகள் அதிகளவில் குற்றாலத்தில் குவிந்தனர். தற்போது மேற்குதொடர்ச்சி மலைபகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
கனமழையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றால மெயின் அருவி மற்றும் 5 அருவிகளில் குளிக்க மக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பழைய குற்றால அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்த அருவியில் திடீர் என வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குளித்துக் கொண்டிருந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.
காட்டாற்று வெள்ளத்தில், அஸ்வின் என்ற 17 வயது சிறுவன் அடித்து செல்லப்பட்டார். அந்த சிறுவனைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்படனர். இதில் அருவியிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் அஸ்வினின் உயிரிழந்த உடல் மீட்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் வந்துள்ளார். குற்றாலம் வெள்ளத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிஸ்.. நாடகம்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
Fathers Day 2026.. அப்பா என்பவர்.. நம் உயிர் மட்டுமல்ல!
ஜூலை 1 முதல்.. புத்தெழுச்சி பெறப்போகும்.. 125 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக் கூடாது.. மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்
மேகதாது அணை விவகாரம்... ஜூலை 23 டெல்லியில் ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
தவெக.,விற்கு எதிரான குதிரை பேர வழக்கு தள்ளுபடி...உச்ச நீதிமன்றம் அதிரடி
தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை: 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
ஆஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கான விசா கட்டணம் அதிரடி உயர்வு!
சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது ஏன்?...இபிஎஸ் சரமாரி கேள்வி
{{comments.comment}}