தெளிவாக ஸ்கெட்ச் போடும் இ-ந்-தி-யா... பாஜக உடன் நேருக்கு நேர் மோத தயார்

Sep 01, 2023,10:35 AM IST
டெல்லி : பாஜக.,விற்கு எதிராக ஒன்றிணைந்துள்ள எதிர்க்கட்சிகளின் இ-ந்-தி-யா கூட்டணியின் 3வது கூட்டம் தற்போது மும்பையில் நடந்து வருகிறது. நேற்றும் இன்றும் நடக்கும் கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்து எதிர்க்கட்சிகள் பேசி முடிவு செய்ய உள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக.,வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒன்றிணைந்துள்ள இ-ந்-தி-யா கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று துவங்கியது. இன்றும் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனை நடைபெற உள்ளது. இன்று தொகுதி பங்கீடு குறித்த முடிவு அறிவிக்கப்படலாம் என எதிர்க்கப்பட்டது. ஆனால் அது கிடையாதாம். தொகுதி பங்கீடு குறித்து செப்டம்பர் 30 ம் தேதி தான் முடிவு செய்யப்பட உள்ளதாம். அப்போ இந்த இரண்டு நாள் கூட்டத்தில் என்ன தான் பேசுவாங்க என்பவர்களுக்கு ஆச்சரியப்பட வைக்கும் பல தகவல்கள் உள்ளன.



தற்போது நடைபெற்று வரும் இ-ந்-தி-யா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் இதுவரை எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் இவைகள் தான்...

1. ஒவ்வொரு தொகுதியிலும் பாஜக வேட்பாளருக்கு எதிராக எதிர்கட்சி கூட்டணிகள் சார்பில் ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே நிறுத்தப்படுவார். ஓட்டு பிரியாமல் இருப்பதை தடுப்பதற்காக இந்த பிளான்.

2. தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்வதற்கு முன் பல்வேறு மாநிலங்களில் பேரணி நடத்தி, ஆதரவு திரட்டுவதுடன் மக்களின் மனநிலையை கணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

3. இது தவிர கூட்டணிக்கான சின்னம், தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைப்பது குறித்து தான் தற்போது நடக்கும் கூட்டத்தில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிதாம்.

4. சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று சொன்னது போல், இன்று நடக்கும் கூட்டத்திற்கு பிறகு இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட, எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து கூட்டணி கட்சிகள் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

5. மகாராஷ்டிராவை சேர்ந்த 2 சிறிய கட்சிகள், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 3 கட்சிகளும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணைய ஆதரவு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

6. இதற்கிடையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான ஒய்.எஸ்.ஷர்மிளா, டில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசி உள்ளார். தெலுங்கானா ஒய் எஸ் ஆர் கட்சியை காங்கிரசுடன் இணைப்பது குறித்து அவர் பேசியதாக சொல்லப்படுகிறது.

7. பல்வேறு மாநிலங்களில் உள்ள சிறிய கட்சிகளையும் தங்களுடன் இணைத்துக் கொள்ள இ-ந்-தி-யா கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் பாஜக, இந்த கூட்டணி சுயநலக் கூட்டணி. ரூ.20 லட்சம் கோடி ஊழல் செய்த கட்சிகள் ஒன்று சேர்ந்து அமைத்துள்ள கூட்டணி என விமர்சனம் செய்து வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்