ஆபரேஷன் அஜய்:  2வது நாளாக 235 இந்தியர்கள் மீட்பு!

Oct 14, 2023,03:59 PM IST
டெல்லி: இஸ்ரேலில் நடந்து வரும் போரில் சிக்கியுள்ள இந்தியர்கள் 235  பேர் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு மூலம்  டெல்லி வந்தனர். இதில் 28 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

ஹமாஸ் நடத்திய எதிர்பாராத தாக்குதலால்  நிலைகுலைந்த இஸ்ரேல் தற்போது ஹமாஸை தீவிரமாக தாக்கி வருகிறது. இப்போர் இன்றுடன் 8வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இஸ்ரேல் முழு அளவில் போரில் இறங்கி காஸா முனையை சிதைத்து  வருகிறது. உயிரிழப்பைப் பற்றி அது கவலைப்படவில்லை. மாறாக, காஸாவை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கி, அந்தப் பகுதியை முழுமையாக கைப்பற்றுவதில் தீவிரமாக உள்ளது. 



ஹமாஸை பூமியிலேயே இல்லாத அளவுக்கு அழிக்கவும்  இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. நிலைமை மோசமாகி வருவதால், இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு ஆபரேஷன் அஜய் எனும் திட்டத்தை உருவாக்கியது. இந்த திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் சிக்கி தவித்த 212 இந்தியர்கள் நேற்று தனி விமானம் மூலமாக டெல்லி வந்தனர் . நேற்று வந்த 212 பேரில் 21 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில். அவர்களில் 7 பேர் டெல்லியிலிருந்து கோவை சென்றனர்.  மற்றவர்கள் சென்னை வந்து சேர்ந்தனர். 

அதனை தொடர்ந்து 2வது நாளாக இன்று 235 பேர் தனி விமானம் மூலமாக டெல்லி வந்தனர். அவர்களில் 28 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். மேலும் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு விரைந்து செயல்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்