புதுடெல்லி: நாடாளுமன்ற லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி சிலை முன்பு கையில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்துடன் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். அத்தோடு லோக்சபாவிலும் அவர்கள் முழக்கமிட்டு அதிர வைத்தனர்.
18 ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதேபோல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 233 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக கடந்த ஒன்பதாம் தேதி பிரதமராக பதவியேற்றார்.
முதல் கூட்டத் தொடர் காலை 11 மணியளவில் தொடங்கியது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்பிக்கள் பதவிப்பிரமாணம் செய்தனர். முதலில் பிரதமர் பதவியேற்றுக் கொண்டார். நாடாளுமன்ற கூட்டத்திற்கு எப்போதுமே எம்பிக்கள் ஒவ்வொருவராக வருவது வழக்கம். ஆனால் அதற்கு பதிலாக எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி எம்பிகள் ஒன்று திரண்டு காந்தி வளாகத்தின் முன்பு அணிவகுத்தனர். அப்போது அனைவரும் கையில் அரசியல் சட்ட புத்தகத்தை கையில் ஏந்தி சென்றனர். இதனைத் தொடர்ந்து
இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் முன்பு இருந்த காந்தி சிலையை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, திமுக எம்பிக்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இதனை அடுத்து நாடாளுமன்றத்திற்குள் வந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் அமர்ந்தனர். அங்கும் அவர்கள் முழக்கத்தைத் தொடர்ந்தனர். சில மூத்த உறுப்பினர்கள் நாங்கள் பதவி ஏற்க முடியாது. இந்த தற்காலிக சபாநாயகர் நியமனம் முரண்பாடானது எனக் கூறி எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் அவையில் சலசலப்பு நிலவியது.
எதிர்க்கட்சி எம்.பிக்கள் முதல் நாளே இப்படி ஆக்ரோஷம் காட்டியிருப்பதால் அடுத்து வரும் நாட்கள் எப்படி நகப் போகின்றன என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}